News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

By In

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI குறித்த விழிப்புணர்வு பயிற்சி கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள கிராண்ட் சில்வர் ரே எனும் ஹோட்டலில் இப் பயிற்சி நடைபெற்றது. 

இப் பயிற்சியில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான அடிப்படை விடயங்கள், தகவல் கோரிக்கை நடைமுறைகள் போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தகவல் கோரிக்கையொன்றை எவ்வாறு சமர்ப்பித்தல் தகவல் கிடைக்காத சந்தர்ப்பங்களில்  அல்லது கிடைத்த பதில்களில் திருப்தியடையாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு மேன்முறையீடு  செய்தல் போன்றவையும் செயன்முறைகளாக அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இப் பயிற்சிகளில் பங்குபற்றுனர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். 

அதனை தொடர்ந்து தகவல் கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை கொண்டு எவ்வாறு செய்திக் கட்டுரை ஒன்றை எழுதுவது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

இப் பயிற்சிப்பட்டறை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது.

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *