News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

By In

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI குறித்த விழிப்புணர்வு பயிற்சி கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள கிராண்ட் சில்வர் ரே எனும் ஹோட்டலில் இப் பயிற்சி நடைபெற்றது. 

இப் பயிற்சியில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான அடிப்படை விடயங்கள், தகவல் கோரிக்கை நடைமுறைகள் போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தகவல் கோரிக்கையொன்றை எவ்வாறு சமர்ப்பித்தல் தகவல் கிடைக்காத சந்தர்ப்பங்களில்  அல்லது கிடைத்த பதில்களில் திருப்தியடையாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு மேன்முறையீடு  செய்தல் போன்றவையும் செயன்முறைகளாக அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இப் பயிற்சிகளில் பங்குபற்றுனர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். 

அதனை தொடர்ந்து தகவல் கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை கொண்டு எவ்வாறு செய்திக் கட்டுரை ஒன்றை எழுதுவது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

இப் பயிற்சிப்பட்டறை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *