News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

By In

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI குறித்த விழிப்புணர்வு பயிற்சி கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள கிராண்ட் சில்வர் ரே எனும் ஹோட்டலில் இப் பயிற்சி நடைபெற்றது. 

இப் பயிற்சியில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான அடிப்படை விடயங்கள், தகவல் கோரிக்கை நடைமுறைகள் போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தகவல் கோரிக்கையொன்றை எவ்வாறு சமர்ப்பித்தல் தகவல் கிடைக்காத சந்தர்ப்பங்களில்  அல்லது கிடைத்த பதில்களில் திருப்தியடையாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு மேன்முறையீடு  செய்தல் போன்றவையும் செயன்முறைகளாக அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இப் பயிற்சிகளில் பங்குபற்றுனர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். 

அதனை தொடர்ந்து தகவல் கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை கொண்டு எவ்வாறு செய்திக் கட்டுரை ஒன்றை எழுதுவது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

இப் பயிற்சிப்பட்டறை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது.

Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *