News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

By In

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI குறித்த விழிப்புணர்வு பயிற்சி கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள கிராண்ட் சில்வர் ரே எனும் ஹோட்டலில் இப் பயிற்சி நடைபெற்றது. 

இப் பயிற்சியில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான அடிப்படை விடயங்கள், தகவல் கோரிக்கை நடைமுறைகள் போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தகவல் கோரிக்கையொன்றை எவ்வாறு சமர்ப்பித்தல் தகவல் கிடைக்காத சந்தர்ப்பங்களில்  அல்லது கிடைத்த பதில்களில் திருப்தியடையாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு மேன்முறையீடு  செய்தல் போன்றவையும் செயன்முறைகளாக அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இப் பயிற்சிகளில் பங்குபற்றுனர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். 

அதனை தொடர்ந்து தகவல் கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை கொண்டு எவ்வாறு செய்திக் கட்டுரை ஒன்றை எழுதுவது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

இப் பயிற்சிப்பட்டறை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது.

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *