Uncategorized

அனுராதபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து வட மத்திய மாகாண தலைமைச் செயலகம் திருப்தி அடையவில்லை.

By In

இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்ததிலிருந்து கடந்த 11 ஆண்டுகளில், நாட்டை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலகில் வளர்ந்து வரும் நாடான எங்களைப் போன்ற நாடுகளுக்கு அத்தகைய ஒரு பிரம்மாண்டமான அபிவிருத்தி செயல்முறையை முன்னெடுக்கக்கூடிய பொருளாதார வலிமை இல்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வல்லரசுகளிடமிருந்து மானியங்கள் மற்றும் கடன்களை பெறுவது பொதுவான நடைமுறையாகும். 

இது French  Agency for Development (AFD) கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.  இது சிறந்த நகரங்களுக்கிடையிலான இணைப்பு, போட்டி மற்றும் சூழல் நட்பு நிலைமைகள் போன்றவற்றுடன்  நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களை நன்கு அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றும் நோக்கத்துடன் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஜூலை 2020 இல் ஏற்பாடு செய்த RTI ஊடகவியலாளர்கள் மன்றத்தில் இந்த அபிவிருத்தி திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 15, 2020 அன்று, வட மத்திய மாகாண தலைமைச் செயலகத்தில் அபிவிருத்தி குறித்த தகவல்களைக் கோரி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலறியும் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்துவதில் வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் வகிபங்கு என்ன என்ற எங்கள் முதல் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் பின்வருமாறு, 

“வட மத்திய மாகாண சபையின் அதிகாரிகள் உட்பட திட்ட பிராந்திய அபிவிருத்தி குழு, திட்ட நடவடிக்கைகளுக்காக பிற நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியை ஒப்படைத்துள்ளது, இதற்காக மாகாண சபை நிறுவனங்களுக்கு பின்வரும் பொறுப்புகள் காணப்படுகின்றன.

1. நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் திட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்

2. அடையாளம் காணப்பட்ட திட்டங்களை செயல்படுத்த குழுவின் ஒப்புதலை வழங்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்

3. திட்டத்தின் முன்னேற்றத்தை அறிக்கையிடல்” 

அதன்படி,  பின்வரும் மாகாண சபைகள் இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன. 

1. தலைமைச் செயலகம், வட மத்திய மாகாணம்

2. அனுராதபுர மாநகர சபை

3. வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகாரசபை 

4. மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வட மத்திய மாகாணம்

5. மாகாண நில ஆணையாளர் திணைக்களம், வட மத்திய மாகாணம்

6. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 

இந்த நிறுவனங்களில்,  

1. தலைமை செயலாளர் / துணை தலைமை செயலாளர் (திட்டமிடல்) / துணை தலைமை செயலாளர் (பொறியியல்) வட மத்திய மாகாணம்

2. நகர சபை ஆணையாளர், மாநகரசபை அனுராதபுரம்

3. பொது முகாமையாளர், வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகாரசபை, வட மத்திய மாகாணம்

4. பொது முகாமையாளர், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை , வட மத்திய மாகாணம்

5. ஆணையாளர், மாகாண நில ஆணையாளர் திணைக்களம், வட மத்திய மாகாணம்

6. இயக்குநர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 

மேற்கண்ட நிறுவனங்களிலுள்ள அதிகாரிகள் கடமைகளுக்கு பொறுப்பானவர்கள். 

பூர்வாங்க ஒப்பந்தத்தின்படி, 2021 நவம்பர் 30 ஆம் தேதி நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்த எங்கள் விசாரணையை திருப்திப்படுத்த முடியவில்லை காரணம், வட மத்திய மாகாண தலைமைச் செயலாளர் அலுவலகம் இரண்டு சந்தர்ப்பங்களில் தகவல்களை வழங்கியுள்ளது . இது தொடர்பான இரண்டாம் பகுதியை முன்வைப்போம் என்று நாம் நம்புகிறோம்.

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *