Uncategorized

கட்டுப்பாட்டு விலையும் முறைப்பாடுகளும்

By In

மக்களின் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரிசி, சீனி, மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஆட்சியில் வரும் அரசாங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயிக்கின்றன. அதாவது குறிப்பிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யும் போது விதிக்கப்பட்ட விலையினை மீறி அதிக விலைக்கு மக்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் விற்பனை செய்யக் கூடாது. இக் கட்டுப்பாட்டு விலை மக்களின் நலன் கருதி அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்றது. அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்தால் நாம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம். 

 

தேங்காயொன்றிற்கு அதன் சுற்றளவை அடிப்படையாக வைத்து கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்திருந்தது. அதன்படி 12 அங்குலத்தை விட குறைந்த சுற்றளவை கொண்ட தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 60 ரூபா, 12 அங்குலத்திற்கும் 13 அங்குலத்திற்கும் இடைப்பட்ட சுற்றளவையுடைய தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 65 ரூபா, மற்றும் 13 அங்குலத்தை விட கூடுதலான சுற்றளவையுடைய தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 70 ரூபா. ஆனாலும் கடைகளில் தேங்காய் குறிப்பிட்ட விலையினையும் மீறி அதிக விலைக்கு விற்கப்பட்டதும் நாம் கேள்விப்பட்டதுண்டு. அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் ஏதாவது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றதா என்பதை அறிந்துகொள்வதற்காக குறித்த அதிகாரசபைக்கு தகவலறியும் விண்ணப்பமொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு குறித்த அதிகாரசபை பின்வருமாறு பதிலளித்திருந்தது. 

 

2020 ஆம் ஆண்டு, செப்டெம்பர் தொடக்கம் நவம்பர் வரையில் தேங்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு 267 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 108 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. கொழும்பு மாவட்டமே அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற மாவட்டமாகும். அத்துடன் குறைந்தளவிலான முறைப்பாடுகள் நுவரேலியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வியாபாரிகளிற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்வதற்கு அதிகாரசபை தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *