Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – வவுனியா

By In

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்” என்ற தொடர் பயிற்சித் திட்டத்தின் ஏழாவது பயிற்சித் திட்டம் மே 15 ஆம் திகதி  வவுனியாவில் நடைபெற்றது. இதில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி மற்றும் எம். நஹியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இப் பயிற்சி மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான தகவலறியும் உரிமையை பிரஜைகள் அனுபவிப்பதற்காக தகவலறியும் உரிமைச் சட்டத்தை வினைத்திறனுடன் எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. 

இப் பயிற்சியின் ஆரம்பத்தில் சட்டத்தரணி எம். நஹியா அவர்கள் RTI தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் தனது அளிக்கையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து வவுனியா ஊடகவியலாளர் அமையத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் திவ்யா சிவகுமார் அவர்கள் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் சவால்களை ஆணைக்குழுவினருக்கு தெளிவுபடுத்தியிருந்தார். கேள்வி பதில் பகுதியில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பங்குபற்றுனர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்திருந்தனர். அத்துடன் சட்டத்தினை பயன்படுத்தும் போது அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அவற்றிற்கான தீர்வுகள் போன்றன ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்டன. மேலும் மேன்முறையீடுகளை சரியான காலத்தினுள் மேற்கொள்ளுமாறும் பொது அதிகாரசபைகள் சட்டத்தினால் பரிந்துரைக்கப்பட்ட காலவரையினுள் கோரிக்கைக்கு முறையான பதிலை வழங்காவிடின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டினை செய்யுமாறும் வழியுறுத்தியிருந்தனர். தாம் அனுப்பிய சில கோரிக்கைகளுக்கு தகவல் அலுவலகரிடமிருந்து ஏற்புக் கடிதம் வழங்கப்படுவதில்லை என்றும் அதனால் தாங்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு அத்தாட்சி எதுவுமில்லை என்று பங்குபற்றுனர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ஆணையாளர்கள் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட காலம் நிறைவடைந்திருப்பின் குறித்தளிக்கப்பட்ட அலுவலகருக்கோ ஆணைக்குழுவுக்கோ மேன்முறையீடு செய்யும்படி கூறினர்.  

மதிய நேர உணவின் பின்னர் பங்குபற்றுனர்கள் குழுக்களாக இணைந்து பொதுவான ஒரு தலைப்பினை தெரிவு செய்து தகவலறியும் கோரிக்கையின் முதலாவது படிவமான RTI 01 விண்ணப்பத்தினை பூரணப்படுத்தி அளிக்கை செய்திருந்தனர். இது ஒரு குழுச் செயற்பாடாக இடம்பெற்றிருந்தது.  

Learn About - Sri Lanka Rights to Information Act

லேக்கவுஸ் பத்திரிகைகளிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமை உதவி மையம்  29 மார்ச் 2023 அன்று, லேக் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இலங்கை அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் இற்கு…

By In
Learn About - Sri Lanka Rights to Information Act

மவ்பிம பத்திரிகை செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவித்தல் – இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI குழுவினர், மார்ச் 01 ஆம் திகதி சிலோன் நியூஸ்பெபேர்ஸ் இன்  மவ்பிம மற்றும் சிலோன்…

By In
Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – களுத்துறை

இலங்கையில் தகவல் அறியும் உரிமை நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து…

By In
Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – மட்டக்களப்பு

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *