News

RTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்

By In

மாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டதால் அப்பிரதேசத்தில் வாழும் 500 குடியிருப்பாளர்கள் அளவில் இவ்வாறு சிரமங்களை அனுபவிக்க நேரிட்டிருக்கின்றது.
நிறுத்தப்பட்டுள்ள பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்கச் செய்வதற்காக அப்பிரதேச மக்கள் பல இடங்களுக்கு கடிதங்கள் எழுதியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தகவல் அறிவதற்கான சட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டதும் அப்பகுதி மக்கள் இந்த பகுதி பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டமைக்கான காரணம் பற்றிய தகவலை உடகம பஸ் டிப்போவில் இருந்து கோருவதற்கு தீர்மானித்தனர். 2018 டிசம்பர் மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் உடகம டிப்போவில் கையளிக்கப்பட்டது. தகவல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் பதில் எதனையும் டிப்போ வழங்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக மேன்முறையீட்டு அதிகாரிக்கு மேலும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான பதிலை எதிர்பார்த்தனர். ஆனாலும் அதற்கும் அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இவ்விடயத்தில் அதிகாரிகளின் கண்கள் குருடான நிலையே காணப்பட்டது.
இருந்தாலும் குடியிருப்பாளர்கள் இந்த விடயம் தொடர்பாக அவ்வளவாக திருப்தியை வெளியிடவில்லை. அவர்களது பிரச்சினைக்கு அதிகாரிகளால் தகவல் சட்டத்தின் அடிப்படையிலும் உரிய பதில் வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். ஆனாலும் அவர்களால் ஒரு விடயத்தில் திருப்தி அடைய முடிகின்றது. அதாவது முன்பை விட இப்போது அச்சமின்றி அதிகாரிகளிடம் வினா எழுப்புவதற்கு தகவல் அறிவதற்கான சட்டம் உதவியாக அமைவதால் ஒரு நாள் அவர்களது பிரச்சினைக்கு இச்சட்டத்தால் பதில் கிடைக்கலாம் என்று நம்புகின்றனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி தகவல் கோரிய விடயம் பற்றி சமர்ப்பித்த பதிவு இதுவாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

ப.பிறின்சியா டிக்சி தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது…

By In
News

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள…

By In
News

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் 79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன

க.பிரசன்னா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல்,…

By In
News

வாடகை கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்கள்

N.M. நஸ்ரான் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *