News

RTI நடவடிக்கை: சமூக நலனை கவனத்தில் எடுத்து மதுபான கடை இடமாற்றம்

By In

வெலிமட பிரதேச சபைக்குட்பட்ட ரன்தன்பொல என்ற இடத்தில் பாடசாலைக்கு மிக அண்மித்ததாக மதுபான கடை அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது பல்வேறு வகையிலும் இந்த மதுபான விற்பனைக் கடை பொதுமக்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தவதாக இருந்து வந்தது.
இந்த மதுக்கடை காரணமாக குறிப்பிட்ட பகுதி பாடசாலைகயில் கல்வி கற்கும் மாணவிகள் பலவிதமான தொந்தரவுகளுக்கு உள்ளாக வேண்டி இருந்தது. போதைக்குள்ளான மற்றும் மதுக்கடைக்கு வரும் ஆண்கள் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் மோசமான வார்த்தைகளைக் கொண்டு இம்சைப்படுத்தல் போன்ற தொல்லைகளுக்கு ஆளாக வேண்டி இருந்தது. அவ்வாறே ஏனைய மாணவர்களுக்கும் இந்த மதுக்கடை பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.
ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் மதுப்பாவனை இப்பிரதேசங்களில் பல குடும்பங்களை பாதித்து இருந்ததோடு குடும்ப அங்கத்தவர்கள், குறிப்பாக பெண்களும் பிள்ளைகளும், தொல்லைகளுக்கு உள்ளாகும் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமிருந்தது. குடும்பங்களை பாதித்தது மட்டுமல்லாமல் இப்பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் வீதமும் அதிகரித்து காணப்பட்டது. அதிகமான தொழிலாளர்களும் தினமும் மதுபானத்திற்காக செலவு செய்யும் தொகையும் அதிகரித்து காணப்பட்டமை மேலும் மோசமான பாதிப்பாகும்.
இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கும் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் அதற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய கலந்துரையாடல் அப்பிரதேச மக்களுக்கு கை கொடுத்தது எனலாம். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய செயலமர்வில் இப்பகுதி இளைஞர்களும் பங்குபற்றினர். அவர்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு பின்வரும் வினாக்களை உள்ளடக்கியதாக தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் 2018 நவம்பர் மாதம் விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்தனர்.
• பாடசாலைக்கும் மதுபான கடைக்கும் இடையில் இருக்க வேண்டிய தூரம் என்ன?
• எவ்வளவவு காலமாக இந்த மதுபான கடை இப்பிரதேசத்தில் நிறுவப்பட்டிருக்கின்றது?
• பாடசாலை மற்றும் மத ஆலயம் இருக்கும் பகுதியில் மதுக்கடை நிறுவ எவ்வாறு திட்டமிடப்பட்டது?
விண்ணப்பதாரியால் வினவப்பட்டதற்கிணங்க பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட பதில் அவ்வளவாக திருப்தியானதாக இருக்கவில்லை. பிரதேசவாசிகளது வேண்டுகோளாக இருந்தது ஒன்றில் மதுக்கடையை மூடிவிட வேண்டும் அல்லது வேரொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதாகும்.
அதே நேரம் இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலகத்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாது போன அதே நேரம் இளைஞர் அமைப்பொன்று மதத் தலைவர்களது உதவியுடன் இந்த மதுக்கடைக்கு எதிராக மாணவர்களை அறிவூட்டல் செய்து எதிர் முரண் செயற்பாட்டை மேற்கொண்டது.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக பலமுறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிய போதும் அதிகாரிகளது கண்கள் குருடாக இருந்த அதே நேரம் தகவல் அறிவதற்கான சட்டம் அதிகாரிகளை கேள்வி எழுப்பவும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வேண்டாத ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உதவி செய்வதாக அமைந்ததாக இளைஞர்கள் கூறுகின்றனர். அத்துடன் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு உள்ளாவது மிகவும் பயனுள்ள விடயம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித் திட்டத்துடன் (USAID) தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும், மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்

க. பிரசன்னா பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்…

By In
News

யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…

By In
News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *