News

RTI ஊடகவியலாளர் மன்றம் 31.03.2023

By In

மார்ச் மாதத்திற்கான RTI ஊடகவியலாளர் மன்றம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 09 ஊடகவியலாளர்கள் இம் முறை நடைபெற்ற மன்றத்தில் பங்குபற்றியிருந்ததுடன், RTI பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்ட மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் .

இந்த மன்றத்தில் RTI ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர் திரு.பிரசன்னகுமார் அவர்கள் மார்ச் மாதத்தின் “Spotlight journalist” ஆக கலந்து கொண்டார். “RTI இனைப் பயன்படுத்தும் போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது அளிக்கையில் “இந்திய வீட்டுத் திட்டம் – அமைச்சரின் உணவும் ஒதுக்கப்பட்டுள்ளதா?” என்ற தலைப்பில் அவர் எழுதிய  கட்டுரைகளில் ஒன்றை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரையை வெளியிட்ட பின்னர் எவ்வாறான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டார் எனவும் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்ட நடைமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஊடகவியலாளர் மன்றத்தில் பொதுவாக ஊடகவியலாளர்கள் நடைமுறை விடயங்களைப் பற்றி விவாதித்து பொது அதிகாரசபைகளிடம் RTI கோரிக்கைகளை கூட்டாக தாக்கல் செய்வது வழக்கம். அந்தவகையில், இன்றைய மன்றத்தில் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் நன்கொடைகள் தொடர்பாகவும் கொவிட் இற்கு பிந்தைய காலத்தில் சேவையில் இல்லாத பேருந்துகள் குறித்தும் கலந்துரையாடி கேள்விகளையும் தயார்ப்படுத்தினர்.

இறுதியில் அனைத்து RTI மன்ற ஊடகவியலாளர்களும் RTI கட்டுரைகளை எழுத ஊக்குவிக்கப்பட்டதோடு SLPI வழங்கும் சேவைகளைப் பற்றியும் பகிரப்பட்டது. 

News

இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்

க. பிரசன்னா பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்…

By In
News

யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…

By In
News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *