News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பற்றி ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய அறிவூட்டல் செய்யும் செயலமர்வொன்று அனுராதபுரத்தில்  ஹபி லியோனி ஹோட்டலில் நடைபெற்றது. தகவல் அறிவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற நாடுகள் வரிசையில் இலங்கையின் சட்டம் மூன்றாவது ஸ்தானத்தில் மதிக்கப்பட்டாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்தவதை காண முடியவில்லை. இச்சட்டம் அமுலில் உள்ள பிரபலமான நாடுகளில் கூட அதன் சரியான பலனை பெற அதிக காலம் சென்றுள்ள நிலையில் இலங்கையிலும் இதனால் முழுமையான பயனை அடைவதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்து வருகின்றது.

சிங்கள மொழி மூலம் நடத்தப்பட்ட இந்த செயலமர்விற்கு வவுனியா மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மிகுந்த உட்சாகத்துடன் பங்குபற்றினர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.

இந்த சட்டத்தின் மூலம் தகவல் கோரும் போது எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு சரியான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *