தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய அறிவூட்டல் செய்யும் செயலமர்வொன்று அனுராதபுரத்தில் ஹபி லியோனி ஹோட்டலில் நடைபெற்றது. தகவல் அறிவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற நாடுகள் வரிசையில் இலங்கையின் சட்டம் மூன்றாவது ஸ்தானத்தில் மதிக்கப்பட்டாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்தவதை காண முடியவில்லை. இச்சட்டம் அமுலில் உள்ள பிரபலமான நாடுகளில் கூட அதன் சரியான பலனை பெற அதிக காலம் சென்றுள்ள நிலையில் இலங்கையிலும் இதனால் முழுமையான பயனை அடைவதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்து வருகின்றது.
சிங்கள மொழி மூலம் நடத்தப்பட்ட இந்த செயலமர்விற்கு வவுனியா மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மிகுந்த உட்சாகத்துடன் பங்குபற்றினர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
இந்த சட்டத்தின் மூலம் தகவல் கோரும் போது எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு சரியான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
Recent Comments