News, Uncategorized

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தால் எடகல பாதை திருத்தப்பட்டது

By In

அனுராதபுர மாவட்டத்தில் பாலாதிகுளம எனும் இடத்தில் எடகல விகாரை பாதை நீண்டகாலமாக திருத்தப்படாதிருந்த பாதையாகும்.
இந்த பாதையால் பயணிக்கும் மக்கள் தொடர்ச்சியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். பாதையை புணரமைத்து தருமாறு பிரதேச சபைக்கு பலமுறை கடிதங்களை அனுப்பினர். குறித்த பாதை அப்பகுதி விகாரைக்கு செல்லும் பிரதான பாதையாக இருந்ததோடு மக்கள் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்காகவும் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். பாதையில் ஏற்பட்டிருந்த பெரிய குழிகள் காரணமாக மோட்டார் சைக்கிளில் கூட பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. மழை காலங்களில் இந்த பாதையால் போக்குவரத்து செய்வதில் பிரதேச மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கினர்.
நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID-SDGAP) இணைந்த தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொண்ட பின்னர் 2018 டிசம்பர் மாதம் இந்த பாதையின் உண்மை நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக அப்பகுதி பிரதேச சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து தகவல் கோரினர்.
அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் இந்த பாதையை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தகவல் கோரப்பட்டதாயினும் வழங்கப்பட்ட தகவல் அப்பகுதியில் உள்ள வேறொரு பாதை பற்றியதாகும்.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் பாதை புணரமைப்பு பற்றிய தகவல் கேட்கப்பட்டதாயினும் அதற்கு தகவல் வழங்குவதற்கு பதிலாக பாதை புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்றது. அதன்படி 120 மீட்டர் தூரத்திற்கு கற்கள் பதிக்கப்பட்டு அதற்காக செலவு செய்யப்பட்ட விபரங்களும் அறிவிக்கப்பட்டன.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் பலத்தால் இந்த வேலை நடந்ததாக இளைஞர்கள் கருதுகின்றனர். இந்த சட்டத்தின் அடிப்படையில் தகவல் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால் 14 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும். அல்லது அது பற்றி அறிவிக்க வேண்டும். அதனால் தகவல் அறியும் சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *