News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

By In

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர் சந்தித்திருந்தனர். இச் சந்திப்பு மார்ச் 22 ஆம் திகதி லங்காதீப பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை உதவி மையத்தின் சிறப்பம்சங்களை விபரித்ததுடன், அச்சுத் துறையில் முன்னணி வகிக்கும் சிங்களப் பத்திரிகைகளில் ஒன்றான லங்காதீப பத்திரிகை ஊடகவியலாளர்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்துமாறும் வலியுறுத்தினர்.  

மேற்படி கலந்துரையாடலின் போது, ஊடகவியலாளர் ஒருவர் பொது அதிகாரசபைகளிடம் பல RTI கோரிக்கைகளை சமர்ப்பித்த பின்னர், அவரது தகவல் கோரிக்கைகளுக்கு பகுதியளவு தகவல்களை அல்லது கோரிக்கை  நிராகரிக்கப்பு அறிவிப்புகளை மட்டுமே பெற்றதாகக் கூறினார். அவர் தனது நேரத்தை நிர்வகிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறித்தளிக்கப்பட்ட அலுவலகரிடம் மேன்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு உதவுவதற்காக SLPI வழங்கும் இச் சேவையைப் பற்றி அறிந்து கொள்வதில் அவர் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெரும்பாலான ஊடகவியலாளர்கள் RTI என்றால் என்ன என்பதை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர்கள் மேன்முறையீட்டு நடைமுறை தொடர்பாக குறைவாகவே அறிந்திருந்தனர். லங்காதீப பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர்களின் இணைப்பாளர் கூறுகையில், பெரும்பாலான பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு RTI மேன்முறையீட்டு நடைமுறை பற்றி மேலதிக தெளிவு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *