பொது அதிகாரிகளிடமிருந்து கேட்கும் கேள்விகளுக்கான பதில்களைப் பெற பொது மக்களுக்கு உதவும் வகையில் தகவல் உரிமைச் சட்டம் உள்ளது. இருப்பினும், அனைத்து பொது அதிகாரிகளும் தகவல்களுக்கான மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தை உணர்கின்றார்களா?
இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு அரச அதிகாரங்கள் தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்பிய ஒரு நபர், இந்த வெளியீடு எழுதும் நேரத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு அனுப்பப்பட்ட சில தகவல் கோரிக்கைகளுக்குமே, இந்த நிறுவனங்கள் சில பதிலளிக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. தேவையான தகவல்களைக் கொண்ட ஒரு கடிதம் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், ஒரு ‘முடிவு நிலுவையில்’ கடிதம் அல்லது எவ்வித ஒப்புகை கடிதமும் கூட இவ்விண்ணப்பதாரரால் பெறப்படவில்லை. நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்ட முறையீடுகளுக்கும் இன்னும் பதிலளிக்காத திணைக்களங்கள் அல்லது அமைச்சகங்களும் இவையே ஆகும். அத்தகைய ஒரு உதாரணம், வாகன உமிழ்வு சோதனை (vehicle emission testing) தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காத போக்குவரத்துத் திணைக்களம் ஆகும்.
ஒருவரின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது மற்றும் ஒரு அரசாங்கக் காரியம் (government undertaking) பொதுமக்களுக்கு எவ்விதமான ஆபத்தையோ அல்லது சிரமத்தையோ ஏற்படுத்துகிறதா என்பது போன்ற விடயங்களை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, தகவல் அறியும் உரிமையும் ஒரு மனித உரிமை என்பதை நாட்டின் பொது அதிகாரிகள் அங்கீகரிக்க வேண்டும்.
Recent Comments