News, Uncategorized

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தால் எடகல பாதை திருத்தப்பட்டது

By In

அனுராதபுர மாவட்டத்தில் பாலாதிகுளம எனும் இடத்தில் எடகல விகாரை பாதை நீண்டகாலமாக திருத்தப்படாதிருந்த பாதையாகும்.
இந்த பாதையால் பயணிக்கும் மக்கள் தொடர்ச்சியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். பாதையை புணரமைத்து தருமாறு பிரதேச சபைக்கு பலமுறை கடிதங்களை அனுப்பினர். குறித்த பாதை அப்பகுதி விகாரைக்கு செல்லும் பிரதான பாதையாக இருந்ததோடு மக்கள் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்காகவும் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். பாதையில் ஏற்பட்டிருந்த பெரிய குழிகள் காரணமாக மோட்டார் சைக்கிளில் கூட பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. மழை காலங்களில் இந்த பாதையால் போக்குவரத்து செய்வதில் பிரதேச மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கினர்.
நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID-SDGAP) இணைந்த தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொண்ட பின்னர் 2018 டிசம்பர் மாதம் இந்த பாதையின் உண்மை நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக அப்பகுதி பிரதேச சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து தகவல் கோரினர்.
அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் இந்த பாதையை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தகவல் கோரப்பட்டதாயினும் வழங்கப்பட்ட தகவல் அப்பகுதியில் உள்ள வேறொரு பாதை பற்றியதாகும்.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் பாதை புணரமைப்பு பற்றிய தகவல் கேட்கப்பட்டதாயினும் அதற்கு தகவல் வழங்குவதற்கு பதிலாக பாதை புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்றது. அதன்படி 120 மீட்டர் தூரத்திற்கு கற்கள் பதிக்கப்பட்டு அதற்காக செலவு செய்யப்பட்ட விபரங்களும் அறிவிக்கப்பட்டன.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் பலத்தால் இந்த வேலை நடந்ததாக இளைஞர்கள் கருதுகின்றனர். இந்த சட்டத்தின் அடிப்படையில் தகவல் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால் 14 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும். அல்லது அது பற்றி அறிவிக்க வேண்டும். அதனால் தகவல் அறியும் சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *