மட்டக்ளப்பு சந்தியில் வாவிக்கரை வீதி மற்றும் கல்லடி வீதியில் வசிக்கும் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒழுங்கான வடிகாலமைப்பு வசதி இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான வடிகான் திட்டம் காரணமாக மழை காலங்களில் கல்லடி குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுவதால் கடுமையான பாதரிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. நீர் வடிந்து செல்லாமல் தேங்கி நிற்பதால் வெளிப்பகுதிகள் மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகின்றது.
பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டம் (USAID) மற்றும் SDGAP இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. இந்த செயலமர்வில் மட்டக்களப்பு பகுதி இளைஞர்களும் பங்குபற்றினர். அவர்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர்.
அதன் பிரதி பலனாக குறித்த மாநகர சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து மோசமான வடிகாண் பற்றியும் சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் பற்றியும் தகவல் கோரினர்.
ஆனாலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு உரியவர்களிடம் இருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பான மேன்முறையீடு செய்ய அல்லது மீண்டும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து தகவல் கோருவதென்று தீர்மானித்தனர்.
அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக மௌனம் சாதித்தனராயினும் குறிப்பிட்ட குறைபாடு தொடர்பாக அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு தகவல் சட்டம் உதவியாக இருப்பது குறித்து அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் தேவைப்படும் போது தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த அவர்கள் தீட்டமிட்டுள்ளனர்.
தகவல் அறிவதற்கான சட்டம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியதாக கருதுகின்றனர். இந்த விடயம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்களால் சமாப்பிக்கப் பட்டதாகும்.
இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்
க. பிரசன்னா பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்…
யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!
ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…
முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?
க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…
அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது
ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில்…
Recent Comments