News

பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் 5 வருடம்; 2017-2022

By In

உலகளாவிய தகவல்  அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு 2022 செப்டெம்பர் 26 அன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) ‘பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள்; 2017-2022’ என்ற தலைப்பில் இணையவழி குழு கலந்துரையாலை நடாத்தியிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில், இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஜூலியஸ் & க்ரீசியின் சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மகிந்தாரத்ன மற்றும் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சட்ட ஆலோசகரும் ஆய்வாளருமான அஷ்வினி நடேசன் ஆகியோர் பேச்சாளர்களாகவும், சட்டத்தரணியும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான திரு. ஜாவிட் யூசுப் அவர்கள் நெறியாளராகவும் கலந்துகொண்டனர். 

‘இலங்கையின் RTI பயணத்தின் வெற்றிகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன அவர்கள் பேசும் போது, ‘இலங்கையின் RTI பயணத்தின் சாதனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது, இலங்கையின் பிரஜைகள் கடந்த ஐந்து வருடங்களில் RTI சட்டத்தை பயன்படுத்தி தமது சமூகத்தை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். உரையாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரசாந்தி மகிந்தாரத்ன குறிப்பிடுகையில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசாங்கமும் பிரஜைகளும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) சாதனையை நோக்கி பயணிக்க உதவும் ஒரு பாலமாகும். ஆனால் பொது அதிகாரிகளோ அல்லது பிரஜைகளோ வெளிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி தொடர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது கடக்கப்படாத பாலமாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமையின் பயன்பாட்டிற்கும் ஊழலை குறைப்பதற்கும் அல்லது வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அஷ்வினி நடேசன், RTI ஊடாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலியுறுத்தியதோடு குறுகிய காலத்தில் இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். 

இவ் இணையவழி கலந்துரையாடலானது, Media Reform Lanka  இனால் வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களினதும் அதாவது, “இலங்கை தகவல் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணைகளுக்கான வழிகாட்டி (2017-2021)”; “இலங்கையின் தகவல் அறியும் உரிமையின் ஆட்சி மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள்: பிரதிபலிப்புக்கான சிந்தனைகள்”; மற்றும் “இலங்கையின் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணைகளுக்கான சட்ட விளக்கங்கள்; 2019 – 2021”, போன்றவற்றின் வெளியீட்டையும் குறித்தது. இந் நூல்கள் கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன, நிவேதா ஜெயசீலன் மற்றும் இன்ஷிரா ஃபாலிக் ஆகியோரால் திருத்தப்பட்டது. 

முழு காணொளிக்குமான இணைப்பு

News

வட மாகாண பாடசாலைகளில் அதிகரிக்கும் மாணவர் இடைவிலகல்கள்

க.பிரசன்னா கல்வி அமைச்சின் தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட மாகாணத்தில் தோற்றிய 17,627 மாணவர்களில் 2749 மாணவர்கள் வெட்டுப்புள்ளி மற்றும் அதற்கும்…

By In
News

பிப்ரவரி 16, 2023 அன்று நடைபெற்ற RTI ஊடகவியலாளர் மன்றத்தின் சிறப்பம்சங்கள்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவித் திட்டத்தின் (DAP – Direct Aid Programme) அனுசரணையுடன் SLPI RTI ஊடகவியலாளர் மன்றத்தினை ஏற்பாடு…

By In
News

மக்களின் பின்னூட்டல் மற்றும் பங்களிப்புகளற்ற உள்ளூராட்சி சபை வரவுசெலவு திட்டப் பிரேரணை

– சாமர சம்பத் ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர்-டிசம்பர் காலப்பகுதியில் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்தும் முக்கிய விவகாரங்களில் வரவு செலவுத் திட்டமும்  ஒன்றாகும். தேசிய மட்டத்தில்,…

By In
News

கண்டி மாவட்டத்தில் தரிசு நிலமாக காணப்படும் 1813 ஏக்கர் வயல் காணிகள்

முகம்மது ஆசிக் இலங்கை  மன்னர் காலத்திலிருந்தே விவசாய நாடாகப் புகழ் பெறுவதற்கான  பிரதான காரணம் இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு என்பதால் ஆகும். ஆகாயத்திலிருந்து விழும்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *