News

கண்டி மாவட்டத்தில் தரிசு நிலமாக காணப்படும் 1813 ஏக்கர் வயல் காணிகள்

By In

முகம்மது ஆசிக்

இலங்கை  மன்னர் காலத்திலிருந்தே விவசாய நாடாகப் புகழ் பெறுவதற்கான  பிரதான காரணம் இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு என்பதால் ஆகும்.

ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீரைக் கூடக் கடலில் கலக்க விடாத மன்னர்கள் காணப்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் தற்போது நெற்பயிர் செய்கைக்குத் தடைகள் ஏராளம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்தக் கட்டுரையானது  பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட மலையகத்தின் தனித்துவமான பிரதேசமாகத் திகழும் கண்டி மாவட்டத்தில் காணப்படும் நெல் வயல்கள் தொடர்பிலான  தேடல் ஆகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 45,457 ஏக்கர் 03 றூட்,08 பேர்ச்சஸ் வயல் காணிகளில்  2022 ஆம் ஆண்டில் 1813 ஏக்கர் 02 றூட்  மற்றும் 32 பேர்ச்சஸ் வயல் காணிகள் தரிசு நிலமாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம் 20 பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கள் தொகை 1,501,000 காணப்படுவதுடன் 1940 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில் மாவட்டத்தில் நெற்செய்கைக்கும் தனி இடம் காணப்படுகின்றது. மினிபே மஹா வரி திட்டத்தின் கீழ், நாட்டில் பிரதான  விவசாய திட்டம் இயங்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ நெல் செய்கை  மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் மாவட்டத்தில் அதிகளவான நெற்செய்கை காணிகள் தரிசு நிலமாகக் காணப்பட்டதுடன், அந்தத் தரிசு வயல்களை பண்படுத்தும் (உழுவும்) போது அந்நிலங்கள்  பயனற்ற தன்மையில் காணப்பட்டது. கண்டி மாவட்டத்தில் தரிசு வயல்களை உழுவும்  அல்லது பண்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், தரிசு நிலங்கள் இன்னும் காணப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அதன்படி, மாவட்டத்தில் நெல் சாகுபடி தொடர்பான உண்மையான தரவுகளை அறிய 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின் கீழ் பெறப்பட்ட தகவல்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட  கோரிக்கைக்கு, கண்டி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி அனுஷா தேவப்பிரியவின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட பதிலில் இந்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் 45,457 ஏக்கர் 03 றூட்   08 பேர்ச்சஸ் நெல்வயல்கள்  காணப்படுவதாகவும், அதில் 26,846 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த சிறுபோக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல  அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கமநல அபிவிருத்தித் திணைக்களம் வழங்கிய தகவலின் படி 2022 ஆம் ஆண்டில் 1813  ஏக்கர் 2 றூட்  32 பேர்ச்சஸ் நெற்செய்கை காணிகள் தரிசுநிலமாகக் காணப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு மீள் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தரிசு வயல் காணிகளின் அளவு 378 ஏக்கர், 2 றூட், 32 பேர்ச்சஸ் எனக் கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக மாவட்டத்தில் காணப்படும் தரிசு நிலங்களான 191 ஏக்கர், 02 றூட் வயல் காணிகளை இந்தப் பெரும் போகத்தில் மீண்டும் பண்படுத்துவதற்கு (உழுவதற்கு) எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *