News

ஆறு வருடங்களில் 142 சிறுவர்கள், 499 பெண்கள் கொலை! 7758 சிறுவர்கள் மீதும் 14,023 பெண்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகங்கள்

By In

க.பிரசன்னா

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 31,810 முறைப்பாடுகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 45,404 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக 31,810 குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 142 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 சிறுவர்களுக்கு எதிராக கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன. 228 சிறுவர்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 7758 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4471 சிறுவர்கள் தமது நெருங்கிய உறவினர்களினாலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிராக 45,404 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 499 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பெண்கள் மீது கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

1401 பெண்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 14,023 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *