News

ஆறு வருடங்களில் 142 சிறுவர்கள், 499 பெண்கள் கொலை! 7758 சிறுவர்கள் மீதும் 14,023 பெண்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகங்கள்

By In

க.பிரசன்னா

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 31,810 முறைப்பாடுகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 45,404 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக 31,810 குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 142 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 சிறுவர்களுக்கு எதிராக கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன. 228 சிறுவர்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 7758 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4471 சிறுவர்கள் தமது நெருங்கிய உறவினர்களினாலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிராக 45,404 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 499 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பெண்கள் மீது கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

1401 பெண்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 14,023 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In
News

கொவிட் தடுப்பூசி இறக்குமதியில் அரசாங்கத்துக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம்

க.பிரசன்னா உலகளவில் இன்னும் கொவிட் தொற்றின் அச்சம் முற்றாக நீங்கவில்லை. தற்போது பிரித்தானியாவில் கொவிட் தொற்றின் புதிய வகை அடையாளம் காணப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில்…

By In
News

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ப.பிறின்சியா டிக்சி ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *