News

அரச துறைகளிலான வேலைவாய்ப்பு முறையில் மாற்றத்திற்கு தகவல் சட்டம் வழிவகுத்தது

By In

அரச துறைகளிலான தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்பபு செய்யும் போது தேவையான தகைமைகளுக்கு மேலதிகமாக ஆதிக்கம் செலுத்துவது அரசியல் செல்வாக்கு அல்லது வேறும் கையாடல்களாகும். அரசாங்க பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போது இவ்வாறான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசாங்க பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கேரப்பட்டன. அதற்கான தகுதிகாண் பரிட்சையும் நடத்தப்பட்டது ஆனால் ஆங்கில மொழி மூலம் தோற்றியவர்களது பெறுபேறுகள் வெளியிடப் பட்டதாயினும் ஏனைய மொழி மூலம் எவரும் சித்தியடைந்ததாக அறிவிக்கப் படவில்லை. சிங்கள மொழி மூலம் தோற்றியவர்கள் அவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அதிகாரிகளை கேள்வி எழுப்புவதற்காக 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான சட்டத்தை பற்றி அறிந்து கொண்ட பின்னர் அதனை பயன்படுத்த உத்தேசித்தனர். இந்த பரீட்சை தொடர்டபாகவும் உரிய இடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் நியமனம் தொடர்பாக தகவல் கோரி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இவ்வாறான ஏற்கனவே அவர்களால் அதிகாரிகளை நீதி கோரி கேள்வி எழுப்புவதற்கு அச்சப்பட்ட விடயங்கள் தொடார்பாக கேள்வி கேட்பதற்கு சிறந்த வழி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
அதனால் இந்த செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்கள் மக்களை பாதித்துள்ள பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக தகவல் சட்டத்தை பயன்படுத்தி எவ்வாறு நிவாரணங்களை பெறுவது என்பது தொடர்பாக அறிவூட்டல் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த விடயமானது இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து நடத்திய தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *