News

வன பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவல் தாமதங்கள்

By In

சரியான தகவலின் பண்புகள் என்ன? அது துல்லியமான, பொருத்தமான, முழுமையான, தெளிவான, நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.

கோரப்பட்ட தகவல் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவைப் பற்றி ஒரு தகவல் அதிகாரி தகவல் கோருபவருக்கு பதினான்கு வேலை நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று தகவல் உரிமைச் சட்டம் கூறுகிறது. ஆகையால், ஒரு தகவல் அறியும் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட பொது அதிகாரத்திடமிருந்து ‘முடிவு நிலுவையில்’ கடிதத்தைப் பெற காத்திருக்க வேண்டிய அதிகபட்ச நேரம் இதுவாகும்.

ஆனால் இது எப்போதும் இவ்வாறு நடப்பதில்லை. தகவல் கோருபவர் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த விதமான பதிலும் பெறாமல் காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம். ஆயினும் ஒருவர் காலவரையின்றி தகவலுக்கு காத்திருக்க முடியாது; இதனால் மேன்முறையீடு செய்ய வேண்டிய அவசியமும் எழுகிறது. சிங்கராஜ மழைக்காடு தொடர்பான தகவல்களைக் கோரி இலங்கையின் வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தகவல் அறியும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தது இதுவே.

தாமதமாக பதிலளிப்பதால் தகவல் காலாவதியாகிவிடக்கூடும் என்பதால், தேவையான தகவல்களை நேரத்துடன் பெறுவது கோரிக்கையாளருக்கு முக்கியமானதே. காலாவதியாகிய தகவல் கோரிக்கையாளருக்கு பயனளிக்காமல் போய்விடக்கூடும்.

சில அரசாங்க அதிகாரிகள் நாங்கள் தகவல்களைக் கேட்கும்போது அதற்கேற்றவாறு சிறப்பாக செயல்படுகின்றனர் என்பதும் உண்மைதான். என்றாலும், ஒவ்வொரு பொது அதிகாரமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் முயற்சிப்பது முக்கியமாகும்.

News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *