News

RTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்

By In

மாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டதால் அப்பிரதேசத்தில் வாழும் 500 குடியிருப்பாளர்கள் அளவில் இவ்வாறு சிரமங்களை அனுபவிக்க நேரிட்டிருக்கின்றது.
நிறுத்தப்பட்டுள்ள பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்கச் செய்வதற்காக அப்பிரதேச மக்கள் பல இடங்களுக்கு கடிதங்கள் எழுதியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தகவல் அறிவதற்கான சட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டதும் அப்பகுதி மக்கள் இந்த பகுதி பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டமைக்கான காரணம் பற்றிய தகவலை உடகம பஸ் டிப்போவில் இருந்து கோருவதற்கு தீர்மானித்தனர். 2018 டிசம்பர் மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் உடகம டிப்போவில் கையளிக்கப்பட்டது. தகவல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் பதில் எதனையும் டிப்போ வழங்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக மேன்முறையீட்டு அதிகாரிக்கு மேலும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான பதிலை எதிர்பார்த்தனர். ஆனாலும் அதற்கும் அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இவ்விடயத்தில் அதிகாரிகளின் கண்கள் குருடான நிலையே காணப்பட்டது.
இருந்தாலும் குடியிருப்பாளர்கள் இந்த விடயம் தொடர்பாக அவ்வளவாக திருப்தியை வெளியிடவில்லை. அவர்களது பிரச்சினைக்கு அதிகாரிகளால் தகவல் சட்டத்தின் அடிப்படையிலும் உரிய பதில் வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். ஆனாலும் அவர்களால் ஒரு விடயத்தில் திருப்தி அடைய முடிகின்றது. அதாவது முன்பை விட இப்போது அச்சமின்றி அதிகாரிகளிடம் வினா எழுப்புவதற்கு தகவல் அறிவதற்கான சட்டம் உதவியாக அமைவதால் ஒரு நாள் அவர்களது பிரச்சினைக்கு இச்சட்டத்தால் பதில் கிடைக்கலாம் என்று நம்புகின்றனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி தகவல் கோரிய விடயம் பற்றி சமர்ப்பித்த பதிவு இதுவாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *