News

RTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல்

By In

கம்பஹாவில் பயன்படுத்தப்படுகின்ற பழைய பஸ்நிலைய கட்டிடம் இல : 2 இற்கு பதிலாக மேம் பாலத்திற்கு அருகாமையில் புதிதாக பஸ் நிலைய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த புதிய கட்டிட நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகும்.
கட்டிட நிர்மாண வேலைகள் ஐந்து மாதங்களுக்கு முன்னதாக நிறைவடைந்துள்ளன. ஆனாலும் இதுவரையில் அந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவில்லை. அதனால் அந்த கட்டிடத் தொகுதி தற்போதைய நிலையில் பல்வேறு விதமான விரும்பத்தகாத செயற்பாடுகளுக்காகவும் முறைகேடாகவும் ஒரு சிலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் அந்த இடம் முற்றாக சட்ட ஒழுங்கிற்கு முரணான வேலைகள் நடைபெறும் பகுதியாக மாறி இருக்கின்றது. அத்துடன் முறையான பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாததால் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டும் இடமாகவூம் இந்த புதிய பஸ் நிலைய கட்டிடத் தொகுதி அமைந்துள்ள இடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி சமர்பபிக்கப்பட்ட விண்ணப்பம் ஊடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி ஏன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை என்ற தகவல் கோரப்பட்டது. கம்பஹா மாநகர சபை தகவல் கோரியவரை தொடர்பு கொண்டு அது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக நேரடியாக வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அது தொடர்பாக மேலதிக விசாரணைகளின் பின்னர் 14 நாட்களுக்குள் பதிலளிப்பதாக விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்பட்டது.
போதுமான சுகாதார மற்றும் கழிவறை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பது தாமதமடைவதாகவும் தற்போது அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருவதால் அந்த வேலைகள் பூர்தியடைந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என்று பின்னர் பதிலளிக்கப்பட்டது.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இப்பிரதேச பயிலுனரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *