News

RTI நடவடிக்கை: தகவல் சட்டத்தை பயன்படுத்தி தெல்பெத்தை பாலத்தை புணரமைக்க வலியுருத்தல்

By In

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு போக்குவரத்து, பாலம், நீர் வடிகால் அமைப்பு உட்பட அடிப்படை வாழ்க்கை வசதிகள் அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு தேவையான இத்தகைய அடிப்படை வாழ்க்கை வசதிகளை செய்து கொடுப்பதற்காக பொது நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்புமாகும்.
எவ்வாறாயினும் இலங்கையில் அதிகமான பகுதிகளில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் உதாசீனம் காட்டப்பட்டு வருவதோடு மில்லியன் கணக்கிலான அரச பொது நிதி வீணாக விரயம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை அறிய முடிகின்றது. இவ்வாறான விடயங்களின் பின்னணியில் அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் இருந்து செயற்படும் அல்லது மேற்கொள்ளும் மோசடிகள் பற்றி அதிகமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அதிகமாக அறிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் அரச துறையிலான ஊழல்களை ஓரளவுக்காவது குறைப்பதற்கு பயன்படலாம்.
பதுளையில் தெல்பெத்தை கிரமத்தவர்களில் ஒருசிலர் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி அபப்குதிக்கான பாலத்தின் நிர்மாண வேலைகளைப் பற்றி கேள்வி எழுப்ப தீர்மானித்தனர்.
பதுளு ஓயாவூக்கு மேலால் தெல்பெத்தை கிரமத்தை இணைக்கும் வகையில் போடப்பட்டிருப்பதே தெல்பெத்தை பாலமாகும். இந்த பாலத்தின் ஊடாகவே மக்கள் கிரமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் பிரதான மார்க்கமாக கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். எல்லெஆராவ கிராம மக்களுக்கும் அவர்களது பிரதான பொருளாதார பயிரான தேயிலையை நகரத்திற்கு கொண்டு செல்ல இந்த பாலமே பிரதான நுழைவு மார்க்கமாக இருந்து வருகின்றது.
இந்த பாலமானது தற்போதைய நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டிருப்பதோடு ஒரு பகுதி தூண் உடைந்து விழும் நிலைக்குள்ளாகி இருக்கின்றது. தினமும் இந்த பாலத்தால் பிரயாணம் செய்யும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக பாலம் இருக்கின்றது. அத்துடன் பாலம் மிகவும் குறுகியதாக அமைந்திருப்பதால் இரண்டு வாகனங்கள் மாறும் போது பாதசாரிகளுக்கு நடந்து செல்ல முடியாதளவிற்கு அச்சம் மிகுந்ததாகவும் இருக்கின்றது.
சிறிய தோட்டச் சொந்தக்காரர்களால் தினமும் இந்த பாலத்தை பயன்படுத்தியே தோட்டங்களில் பறிக்கப்படுகின்ற தேயிலை கொழுந்தை விற்பனை செய்வதற்காக உரிய தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறே நெல் அறுவடை காலங்களில் நெல்லை வாகனங்கள் ஊடாக கொண்டு செல்வதற்காகவும் விவசாயிகள் அவர்கள் விவசாய உற்பத்திகளை நகரத்திற்கு கொண்டு செல்வதிலும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அத்துடன் பாலத்தின் மீதான அமைவும் ஒழுங்கானதாக இல்லாததால் பல விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பாலம் மிக மோசமான நிலையில் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்தாலும் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை.
தெல்பெத்தை மற்றும் எல்லேஆராவ பகுதி மக்களால் பல முறை இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் இல்லாததால் தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி தகவல் கோருவதற்கு பிரதேசவாசிகள் சிலர் தீர்மானித்தனர்.
அதன்படி பதுளை பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் மூலம் பாலத்தின் திருத்த பணிகளின் உதாசீனம் தொடர்பாக தகவல் கோரினர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. இந்த செயலமர்வில் இப்பகுதி இளைஞர்களும் பங்குபற்றினர். RTI/BD/BPS/2018/02 என்று இலக்கமிட்டு 04-12-2018 என்று திகதியிட்டு தெல்பெத்தை பிரதேச சபையால் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்களுக்கு பதில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பதிலில் பால திருத்த பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஊவா மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரியதாகும் என்று அறிவிக்கப்பட்டது.
பாலத்தை விரைவில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை திருத்தும் வேலைகளை மேற்கொள்ளும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். தகவல் அறிவதற்கான சட்டம் அவர்களுக்கு உதவும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாகும். அது தொடர்பாக அறிவூட்டல் செய்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் அப்பிரதேச இளைஞர் குழுவொன்று கிராம மக்களை தகவல் சட்டம் தொடர்பாகவும் அதிகாரிகளை கேள்வி எழுப்ப உதவும் இச்சட்டம் பற்றியும் அறிவூட்டும் பணியை செய்து வருகின்றனர். அதனால் தகவல் சட்டம் அவர்களது வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த தகவலானது இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய தெல்பெத்தை பகுதி இளைஞர்களால் முன்வைக்கப்பட்டதாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும், மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *