News

RTI ஊடகவியலாளர் மன்றம் 31.03.2023

By In

மார்ச் மாதத்திற்கான RTI ஊடகவியலாளர் மன்றம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 09 ஊடகவியலாளர்கள் இம் முறை நடைபெற்ற மன்றத்தில் பங்குபற்றியிருந்ததுடன், RTI பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்ட மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் .

இந்த மன்றத்தில் RTI ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர் திரு.பிரசன்னகுமார் அவர்கள் மார்ச் மாதத்தின் “Spotlight journalist” ஆக கலந்து கொண்டார். “RTI இனைப் பயன்படுத்தும் போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது அளிக்கையில் “இந்திய வீட்டுத் திட்டம் – அமைச்சரின் உணவும் ஒதுக்கப்பட்டுள்ளதா?” என்ற தலைப்பில் அவர் எழுதிய  கட்டுரைகளில் ஒன்றை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரையை வெளியிட்ட பின்னர் எவ்வாறான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டார் எனவும் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்ட நடைமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஊடகவியலாளர் மன்றத்தில் பொதுவாக ஊடகவியலாளர்கள் நடைமுறை விடயங்களைப் பற்றி விவாதித்து பொது அதிகாரசபைகளிடம் RTI கோரிக்கைகளை கூட்டாக தாக்கல் செய்வது வழக்கம். அந்தவகையில், இன்றைய மன்றத்தில் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் நன்கொடைகள் தொடர்பாகவும் கொவிட் இற்கு பிந்தைய காலத்தில் சேவையில் இல்லாத பேருந்துகள் குறித்தும் கலந்துரையாடி கேள்விகளையும் தயார்ப்படுத்தினர்.

இறுதியில் அனைத்து RTI மன்ற ஊடகவியலாளர்களும் RTI கட்டுரைகளை எழுத ஊக்குவிக்கப்பட்டதோடு SLPI வழங்கும் சேவைகளைப் பற்றியும் பகிரப்பட்டது. 

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *