News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

By In

ந.லோகதயாளன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ். குடாநாட்டில் 17 தனியார் வைத்தியசாலைகள் இயங்கும் நிலையில் இதில் 8 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக் கூடங்களும் உள்ளன. அந்த தனியார் சத்திர சிகிச்சை நிலையங்களில் இடம்பெறும் சத்திர சிகிச்சைகளின்போது தேவைப்படும் குருதி அரச வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் இருந்தே செல்கின்றது. 

மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிக்கு அமைவாகவே இவ்வாறு அரச வைத்தியசாலைகளில் சேரிக்கப்படும் குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிய வருகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தியினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு 8596 பைந்து குருதி கிடைத்துள்ளது. இதில் 807 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2023 ஆம் ஆண்டு 9043 பைந்து குருதி இரத்த வங்கிக்கு கிடைத்துள்ளது. இதில் 875 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் யூன் மாதம் 30 ஆம் திகதி வரையான அரையாண்டு காலப்பகுதியில் 4113 பைந்து குருதி வைத்தியசாலைக்கு கிடைத்துள்ள நிலையில் இதிலிருந்து 441 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.   

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் யூன் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2 ஆயிரத்து 23 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 1507 பைந்து குருதி ஒரு தனியார்  வைத்தியசாலைக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் 209 பைந்து குருதி மற்றுமொரு தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *