News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

By In

ந.லோகதயாளன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ். குடாநாட்டில் 17 தனியார் வைத்தியசாலைகள் இயங்கும் நிலையில் இதில் 8 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக் கூடங்களும் உள்ளன. அந்த தனியார் சத்திர சிகிச்சை நிலையங்களில் இடம்பெறும் சத்திர சிகிச்சைகளின்போது தேவைப்படும் குருதி அரச வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் இருந்தே செல்கின்றது. 

மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிக்கு அமைவாகவே இவ்வாறு அரச வைத்தியசாலைகளில் சேரிக்கப்படும் குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிய வருகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தியினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு 8596 பைந்து குருதி கிடைத்துள்ளது. இதில் 807 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2023 ஆம் ஆண்டு 9043 பைந்து குருதி இரத்த வங்கிக்கு கிடைத்துள்ளது. இதில் 875 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் யூன் மாதம் 30 ஆம் திகதி வரையான அரையாண்டு காலப்பகுதியில் 4113 பைந்து குருதி வைத்தியசாலைக்கு கிடைத்துள்ள நிலையில் இதிலிருந்து 441 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.   

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் யூன் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2 ஆயிரத்து 23 பைந்து குருதி தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 1507 பைந்து குருதி ஒரு தனியார்  வைத்தியசாலைக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் 209 பைந்து குருதி மற்றுமொரு தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *