News

ஆறு வருடங்களில் 142 சிறுவர்கள், 499 பெண்கள் கொலை! 7758 சிறுவர்கள் மீதும் 14,023 பெண்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகங்கள்

By In

க.பிரசன்னா

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 31,810 முறைப்பாடுகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 45,404 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக 31,810 குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 142 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 சிறுவர்களுக்கு எதிராக கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன. 228 சிறுவர்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 7758 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4471 சிறுவர்கள் தமது நெருங்கிய உறவினர்களினாலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிராக 45,404 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 499 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பெண்கள் மீது கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

1401 பெண்களுக்கு கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 14,023 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *