News

சுங்கம் ரூ. 30 மில்லியன் மதிப்புள்ள மஞ்சளை கைப்பற்றியது!

By In

சிறு ஏற்றுமதி பயிர் விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழிலதிபர்களைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மிளகு, பாக்கு மற்றும் புளி உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல சிறு ஏற்றுமதி பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்து 2019 டிசம்பர் 05 அன்று நிதி அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது. 

அதன்படி, மஞ்சள் குறித்து விசாரிக்க 10.02.2021 அன்று இலங்கை சுங்கத்திற்கு ஒரு தகவல் கோரிக்கையை அனுப்பினோம். 13.03.2021 அன்று விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய சரக்கு ஆய்வு பிரிவு மற்றும் இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வு பிரிவு எங்களுக்கு சமர்ப்பித்த தகவல்கள் பின்வருமாறு. 

அளவு – கிலோகிராம்பெறுமதி – இலங்கை ரூபாஎடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை
9,9503,578,852.00பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 100,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
5,0201,227,541.00பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 750,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
5,9751,460,990.00சுங்க விசாரணை நடைபெறுகின்றது.
2,750672,600.00பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 150,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
5,1121,335,907.00பறிமுதல் செய்யப்பட்டது.
6,050.91,502,000.00சுங்க விசாரணை நடைபெறுகின்றது.

அதன்படி, இறக்குமதி தடைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் அளவு 903,854.50 கிலோகிராம் என்று இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் 10 ஆம் திகதி, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர் ஜெயசேகர இந்த விவகாரம் தொடர்பில் தகவல் கோரிக்கையொன்றினை அனுப்பியிருந்தார். இலங்கை சுங்கத்தின் மத்திய சரக்கு ஆய்வு பிரிவு கைப்பற்றிய மஞ்சள் 31.10.2020 அன்று 897,854.50 கிலோவாக இருந்தது. அதன்படி, 31.10.2020 முதல் 10.02.2021 வரையிலான காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் அளவு 6,000 கிலோ ஆகும். 10.02.2021 நிலவரப்படி மத்திய சரக்கு ஆய்வு பிரிவு கைப்பற்றிய 903,854.50 கிலோ மஞ்சளின் மொத்த மதிப்பு ரூ. 314,317,237.09. (முன்னூற்று பதினான்கு மில்லியன் முந்நூற்று பதினேழாயிரத்து இருநூற்று முப்பத்தேழாயிரத்து தொழாயிரம்). 

தடைக்கு பின்னர் 52 முறை சந்தேக நபரை மத்திய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளதுடன், சட்டவிரோதமாக மஞ்சளை நாட்டிற்கு இறக்குமதி செய்த 25 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளது. தகவலறியும் சட்டத்தின் பிரிவு 5 (1) இன் படி, அத்தகைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலுக்கான தகவல் அறியும் விண்ணப்பத்தின் மூலமான எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் பங்குகள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் விசாரித்தபோது,  சுங்க கட்டளைக்கு இணங்க அவர்கள் அனுப்பியதாகக் கூறினர் மற்றும் சுங்கத்திற்கு அறிவிக்கப்படாத மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும், மேலும் சில மஞ்சள் சுங்க ஆய்வுக்குப் பிறகு மீண்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சில மஞ்சள் இறக்குமதி தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 10.02.2021 வரை இலங்கை சுங்கத்தால் மஞ்சள் அழிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *