News

நம் நாட்டில் ஊடகத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29%!

By In

கடந்த காலத்தில் நாம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், பாலின சமத்துவத்தின் நிலை இன்னும் சர்ச்சைக்குரியது. இது குறிப்பாக ஊடகத் துறையில் உள்ளது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஊடகத் துறையில், பெண்களின் பிரதிநிதித்துவம் ஆண்களை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது என்று யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது. 

2020 பிப்ரவரி 26-27 திகதிகளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து யுனெஸ்கோ புது டெல்லி அலுவலகம் ஏற்பாடு செய்த பெண் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சிப்பட்டறையில் பேசிய யுனெஸ்கோ புது டெல்லியின் இயக்குநர் எரிக் ஃபால்ட் கூறுகையில், ஊடகங்களில்  பாலின சமத்துவம் ஊடக சுதந்திரத்திற்கான ஒரு முக்கியமான முன் நிபந்தனையாகும் என்று யுனெஸ்கோ நம்புவதாக கூறினார். 

அதன்படி, 2020 ஆம் ஆண்டில் அரசாங்க தகவல் திணைக்களத்திடம் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை கோரி இரண்டு சந்தர்ப்பங்களில் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு தகவலறியும் விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம். 

அதன்படி, ஊடகத் துறையில் பணிபுரியும் நபர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்து, அது வழங்கிய ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் பின்வரும் தகுதிகளைப் கொண்டிருக்க வேண்டும். 

1. அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனத்தில் குறைந்தபட்சம் 06 மாதங்களாவது நிரந்தர அல்லது ஒப்பந்த அடிப்படையில் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.

2. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் அல்லது அச்சு ஊடக அமைப்பில் சுயாதீன ஊடகவியலாளராக குறைந்தது ஒரு வருடம் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். 

இதன்படி, ஊடகவியலாளர்களின் 3113 அடையாள அட்டைகள் 2020 ஆம் ஆண்டிற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் 904 பெண்கள். அந்த எண்ணிக்கை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.  

  • ஊடகவியலாளர்கள் 835
  • இணைய ஊடகவியலாளர்கள்  44
  • ஊடக சேவைகள் 25 

(இந்த தகவல் 2020 ஆம் ஆண்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட பெண் ஊடகவியலாளர்களுடன் தொடர்புடையது. பயிற்சி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு அடையாள‍அட்டைகள் வழங்கப்படாததால் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம்) 

இருப்பினும், இந்த தகவலுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, தொழில்முறை ஊடகவியலாளர்களாக பெண்களின் பிரதிநிதித்துவம் 29.03% ஆக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *