News

அகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது?

By In

தகவல் அறியும் விண்ணப்பதாரரின் பொதுவான அனுபவம், கோரப்பட்ட தகவல்கள் எமது எல்லைக்குள் வராது என்று ஒரு பொது அதிகாரியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுவது.

பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற நிகழ்வு ஏற்படின், தகவல் கோரிக்கையாளர் மேலதிக ஆராய்ச்சி செய்து,  தனது குறிப்பிட்ட வினவலுக்கு விடை வழங்குவதற்கு பொறுப்பாகக்கூடிய மற்றொரு பொது அதிகாரத்தைக் கண்டறிவார்.

இருப்பினும், வெவ்வேறு அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும் கோரப்பட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக வழங்க இயலாது என்று கூறினால் என்ன செய்வது? கோரிக்கையாளர் இதன் பின் என்ன நடவடிக்கை எடுப்பார்?

இலங்கைக்கு வரும் அகதிகள் குறித்து இரண்டு வெவ்வேறு பொது அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தகவல் அறியும் விண்ணப்பங்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அனுப்பப்பட்டன. இந்த இரண்டு அரசாங்க அதிகாரங்களும் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் திணைக்களத்தில் இல்லை என்று அல்லது அது அவர்களின் எல்லைக்குள் வரவில்லை என்று பதிலளித்தன.

தகவல் அறியும் விண்ணப்பத்தில் உள்ள விடயங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க முடியாது என்ற அடிப்படையில் தகவல் கோரிக்கையை நிராகரிக்கும் பொது அதிகாரசபை, இதுபோன்ற விடயங்களுக்கு எந்த அரச திணைக்களம் பொறுப்பேற்கும் என்பதைக் குறிப்பிட முயற்சி செய்தால், அது தகவல் கோரும் எவராலும் வரவேற்கப்படும் ஒரு செயலாக அமையும்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *