News

பொதுமக்களுக்கு தகவல் அறிய உதவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை

By In

இலங்கையில் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம் நாட்டின் குடிமக்களுக்கு அரசாங்க காரியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்களின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இன்றுவரை, தகவல் அறியும் உரிமை குறிப்பிடத்தக்க சில பயனுள்ள முடிவுகளுடன் வெவ்வேறு வகையான மக்களால் நல்ல பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை விண்ணப்பதாரர்களிடம் நன்றாக பதிலளிப்பரென்று சொல்லக்கூடிய பொது அதிகாரங்களில் சில மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை போன்றவையாகும். இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன் பயன்பாடு போன்ற விடயங்களைப் பற்றிய தகவல்களை மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கியுள்ளது. அத்துடன் வீதிகள், வடிகால்கள் (drainage) மற்றும் குப்பை சேகரிப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கொழும்பு மாநகர சபை பதிலளித்துள்ளது.

மற்றொரு முன்னோக்கில், தகவல் அறியும் விண்ணப்பங்களைப் பெறுவது அரசாங்க அமைச்சகங்களுக்கும் திணைக்களங்களுக்குமே உதவக்கூடும். ஒரு குறிப்பிட்ட பொது அதிகாரத்தின் கீழ் வரும், அவ்வதிகாரத்தால் முன்னரே அறியப்படாத  ஒரு விடயத்தைப் பற்றி ஒரு தகவல் கோரிக்கையாளர் விசாரிக்கும் போது, குறிப்பிட்ட பொது அதிகாரத்தின் கவனம் அவ்விடையத்திடற்கு கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு, அப்பொது அதிகாரி உடனடியாக இவ்விடையத்தைக் கவனித்து செயல்பட முடியும்.

ஆர்வமுள்ள குடிமக்களான எம்மைப் பொறுத்தவரை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு விலைமதிப்பற்ற கருவியாகும். இக்கருவி எங்களுக்கும் ஏனையோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதொன்றாகும். மேலும், அனைத்து வகையான பொது அதிகாரங்களும் தங்கள் கடமைகளை கூடியளவு சிறந்த வகையில் நிறைவேற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு தூண்டுகோலாக செயல்படுகின்றது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *