ஒவ்வொரு ஆண்டும் G.C.E. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கேற்ப சிறந்த புள்ளிகளைப் பெறுவதில்லை. மேலும் முக்கியமாக, அனைவரும் இப்பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதுமில்லை. இவ்வாறானோருக்கு அடுத்த படியாக அமைவதென்ன? இச்சந்தர்பங்களில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மிகவும் முக்கியத்துவமானதொன்றாக விளங்குகின்றது. சாதாரண தரப் பரீட்சையிலேனும் சிற்பியடைந்த அல்லது பரீட்சைகுத் தோற்றுவித்த இளைஞர்களுக்கு இப்போது பலவிதமான தொழிற்பயிற்சி பாடநெறிகளைக் கற்கும் வாய்ப்பு எம் நாட்டில் உள்ளது. இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பாடநெறிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த சில முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக, தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, வெவ்வேறு பாடநெறிகளைக் கற்பதற்கு வெவ்வேறு தகுதிகள் தேவைப்படும். உதாரணமாக, ஒரு ஆட்டோமொபைல் மின்னியல் வல்லுநருக்கான (automobile electrician) தேசிய சான்றிதழ் பாடநெறியில் சேர விரும்பும் ஒரு நபர் குறைந்தது ஆறு சாதாரண தர பரீட்சை பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் NVQ தரம் 3 (NVQ Level 3) தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தாவர வளர்ப்பு மேம்பாட்டு உதவியாளருக்கான தேசிய சான்றிதழுக்காக படிப்பதற்கு, ஒருவர் குறைந்தபட்சம் G.C.E. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவித்தவராகவே இருத்தல் வேண்டும். ‘National Diploma – Electronic Technology’ போன்ற சில பாடநெறிகள் படிப்பதற்கு, தொடர்புடைய NVQ தரம் 3 அல்லது 4 பாடநெறியை முடித்தவராக அல்லது G.C.E. உயர் தரத்தில் தொழில்நுட்ப துறையில் அல்லது பிற தொடர்புடைய துறையில் மூன்று பாடங்களில் சிற்பி பெற்றவராக இருக்க வேண்டும். வயது அடிப்படையிலும் சேர்க்கை வரையறைகள் உள்ளன. தொழிற் பயிற்சி அதிகாரசபையின் படி, இப்பாடநெறிகளை ஆரம்பிக்கக்கூடிய குறைந்தபட்ச வயது பதினாறு ஆகும். பாலின அடிப்படையில் நுழைவு கட்டுப்பாடுகள் இல்லை என்றும் தொழிற் பயிற்சி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் என்பது முக்கியமானதொரு விடயம்; எனவே, பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தொழில் பயிற்சி கிடைப்பதற்கான இவ்வகை வாய்ப்பு பலரது எதிர்காலங்களை மேம்படுத்தும் திறன் கொண்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள்.
EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…
மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…
அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!
க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…
ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…
Recent Comments