News

நொச்சியாகம மாற்று வழிப்பாதை நிர்மாணம் பற்றிய தகவல் அறிய தகவல் சட்டம் உதவியது

By In

பாதைகளின் பராமரிப்புக்கும் அபிவிருத்திகுமாக வருடாந்தம் மில்லியன் கணக்கிலான நிதி ஒதுக்கப்பட்டாலும் இலங்கையின் பல பகுதிகளில் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
நொச்சியாகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக ஜயகம பகுதிக்கான பாதை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருக்கின்றது. அதிலும் தொம்பலகம மற்றும் ஓழுவெவ பிரதேச செயலக பகுதி பாதைகள் மிகவும் மோசமானதாக உள்ளன. குன்றும் குழியுமாக உள்ள பாதைகளை குறைத்த பட்சம் திருத்தி சிரமம் இன்றி பயணம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு தெயட கிருல கண்காட்சி நடைபெற்றபோது தற்காலிக நிவாரணமாக பாதைகள் அரசாங்கத்தால் பழுது பார்க்கப்பட்டன. இருந்தலும் பிரத்தியேகமான மாற்று வழிப்பாதை திருத்தப்படவில்லை. மொரவக கந்த மற்றும் முதிதகம ஆகிய பாதைகள் ஏழு கிலோமீட்டர் தூரமானகதாக இருந்தபோதும் 200 மீட்டர் தூரத்திற்கு மாத்திரமே கொங்ரீட் போடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று நொச்சியாகம பிரதேச பாதைகளை நிர்மாணிக்கவும் பராமரிக்கவும் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்ற தகவல்களை அறிவதற்காக தகவல் அறிவதற்கான சட்டத்தை பன்படுத்தி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பம் சமர்ப்பித்தனர்.
ஆந்த விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசாங்கத்தால் பாதை அபிவிருத்திக்காக 64,00000 ருபா அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் நொச்சியாகம பிரதேச சபைக்கு எந்தவிதமான நிதியும் வழங்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான பணம் விடுவிக்கப் பட்டிருக்கவில்லை
தகவல் கேரிய இளைஞர்களுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பாதை புணரமைப்பு வேலைகளின் தாமதத்திற்கான காரணம் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக அமைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அது தொடர்பாக கேள்வி எழுப்பவும் தகவல் சட்டம் பயன்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் இதன் நன்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி மக்களை அறிவூட்டல் செய்ய வேண்டும் என்றும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் சமர்ப்பிக் கப்பட்டதாகும்.

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *