News

அரச துறைகளிலான வேலைவாய்ப்பு முறையில் மாற்றத்திற்கு தகவல் சட்டம் வழிவகுத்தது

By In

அரச துறைகளிலான தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்பபு செய்யும் போது தேவையான தகைமைகளுக்கு மேலதிகமாக ஆதிக்கம் செலுத்துவது அரசியல் செல்வாக்கு அல்லது வேறும் கையாடல்களாகும். அரசாங்க பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போது இவ்வாறான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசாங்க பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கேரப்பட்டன. அதற்கான தகுதிகாண் பரிட்சையும் நடத்தப்பட்டது ஆனால் ஆங்கில மொழி மூலம் தோற்றியவர்களது பெறுபேறுகள் வெளியிடப் பட்டதாயினும் ஏனைய மொழி மூலம் எவரும் சித்தியடைந்ததாக அறிவிக்கப் படவில்லை. சிங்கள மொழி மூலம் தோற்றியவர்கள் அவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அதிகாரிகளை கேள்வி எழுப்புவதற்காக 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான சட்டத்தை பற்றி அறிந்து கொண்ட பின்னர் அதனை பயன்படுத்த உத்தேசித்தனர். இந்த பரீட்சை தொடர்டபாகவும் உரிய இடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் நியமனம் தொடர்பாக தகவல் கோரி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இவ்வாறான ஏற்கனவே அவர்களால் அதிகாரிகளை நீதி கோரி கேள்வி எழுப்புவதற்கு அச்சப்பட்ட விடயங்கள் தொடார்பாக கேள்வி கேட்பதற்கு சிறந்த வழி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
அதனால் இந்த செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்கள் மக்களை பாதித்துள்ள பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக தகவல் சட்டத்தை பயன்படுத்தி எவ்வாறு நிவாரணங்களை பெறுவது என்பது தொடர்பாக அறிவூட்டல் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த விடயமானது இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து நடத்திய தகவல் அறிவதற்கான சட்டம் பற்றிய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *