News

அரச பல்கலைக் கழகங்களில் விடுதி வசதி பற்றி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் கையளிப்பு

By In

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பாக பின்வரும் தகவல்களை வழங்குமாறு கோரி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
• மூன்றாம் வருட மாணவிகளுக்கான விடுதி வசதிகள் வழங்குவதற்கு மாணவிகளது எண்ணிக்கைக்கு ஏற்ப இட வசதி போதுமானதாக இருக்கின்றதா?
• மாணவிகளது விடுதிக்கான பாதுகாப்பு திருப்திகரமானதாக இருக்கின்றதா?
• சில ஹோட்டல்களில் விடுதி வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு க்கின்றதா?
• அடுத்த வருத்திற்கு என்ன அடிப்படையில் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
• கடந்த வருடம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்ட விடுதிகள் எவை?
• மாணவர்களுக்கு திருப்திகரமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா?
• விடுதிகளுக்கு மேலதிகமாக மாணவர்களை அனுமதிப்பதில் நெருக்கடிகள் உள்ளனவா?
தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தில் இந்த தகவல்கள் எதற்காக கேட்கப்படுகின்றது என்ற காரணம் குறிப்பிடப் படவில்லை என்பதால் உரிய தகவல்களை வழங்க முடியாது என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
அத்துடன் அப் பல்கலைக்கழத்தின் பதிவாளரை சந்தித்து விண்ணப்பம் சமர்ப்பித்த மாணவரின் அiளாயத்தை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
தகவல் அறிவதற்கான சட்டத்தில் தகவல் கோரும் போது அவ்வாறு தகவல் கோருவதற்கான காரணம் என்ன என்ற விடயம் மற்றும் தகவல் கோருபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவால் முன்வைக்கப்பட்டதாகும்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *