பலபிடிய பிரதேச சபையால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஹீனடிய தெற்கு கிராமசேவகர் பிரிவில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கொட்டப்பட்டு வந்திருக்கின்றது. பல வருடங்களாக இவ்வாறு குப்பை கொட்டப்பட்டதயினும் சுற்றாடல் பாதிப்புக்களோ அல்லது அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புக்கள் மற்றும் நுலம்பு பெருக்கம் பற்றியோ கவனத்தில் எடுக்கப்ப டவில்லை.
இவ்வாறான நிலையில் அந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை நிறுத்துவதற்காக நீண்ட நாட்களாக அதிகாரிகளது உதவியை நாடியபோதும் உரிய பிரதி பலன் கிடைக்கவில்லை. அது தொடர்பாக பொதுமக்களால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் வசித்து வரும் ஹர்சன என்பவர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல், தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்கு பற்றியதன் மூலம் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி அறிந்துகொண்டார்.
அதனால் அவர் பலபிட்டிய பிரதேச சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்தார். 2018 டிசம்பர் மாதம் அவர் இந்த விண்ணப்பத்தை ஒப்படைத்தார். பிரதேச சபையின் தகவல் அதிகாரியால் அவருக்கு சில வாரங்களில் ஒரு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. குறித்த குப்பைகளை துப்புறவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் சுகாதார பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்காகவும் மாதாந்தம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே குப்பை கொட்டப்பட்டு வருகின்ற காணி தனியாருக்கு சொந்தமான காணி என்றும் விரைவில் பொருத்தமான இடத்தில் காணி தேடப்பட்டு குப்பைகளை அப்புறப்படுத்தவும் மீள் சூழட்சி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கமைவாக குப்பை கொட்பட்டுக்கொண்டிருந்த நிலைக்கு முடிவு கட்டவும் அதனால் வீசிக்கொண்டிருந்த துர்நாற்றத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பிரதேச சபை நடவடிக்கைகளை எடுப்பது என்ற விடயமும் அறிவிக்கப் பட்டிருந்தது. அத்துடன் புதிதாக கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்ட காணி கொள்வனவின் முன்னேற்றம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக அவர்கள் மீண்டும் ஒரு புதிய தகவல் சட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளனர். அதற்கான பதிலை எதிர்பார்த்து இருக்கின்றனர். அது தொடர்பாக பிரதேச மக்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தை பாராட்டுகின்றனர்.
ஹர்சன ஊரில் ஒரு வீரனைப்போன்று மக்களால் கருதப்படுவதாக கூறுகின்றார். காரணம் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவரால் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி மக்களை அறிவூட்டியமை மற்றும் அந்த சட்டத்தை பயன்படுத்தி நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண உதவியமை ஆகிய காரணத்திற்காக. அத்துடன் இந்த சட்டத்தை மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப் பட்டிருப்பதாகவும் ஹர்டசன கூறுகின்றார்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல், தகவல் அறிவதற்காள சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்கு பற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.
இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்
க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…
2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?
க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
Recent Comments