News

தகவல் அறியும் சட்டம் இலங்கை மின்சார சபை ஊழியர்களை விழிப்படையச் செய்தது

By In

இலங்கை மின்சார சபையால் நாட்டில் பல இடங்களில் பாத ஓரங்களில் போட்டுள்ள மின் கம்பங்கள் பொறுத்தமான இடங்களில் இல்லாமலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. ஒரு சில இடங்களில் உள்ள மின் கம்பங்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் இடையுறாகவும் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. கண்டி மாவட்டத்தில் கண்ணங்கர வீதியல் சீவலி கந்தை என்ற இடத்தில் பொறுத்தப்பட்டுள்ள மின்கம்பங்களும் இவ்வாறான ஆபத்தான நிலையை எதிர்நோக்கி இருப்பவையாகும். வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளன. இத்த விடயத்தால் பல வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
கிராமவாசிகள் இந்த மின் கம்பம்களை பாதையில் இருந்து அகற்றி பொருத்மான பாதுகாப்பான இடத்தில் பொறுத்துமாறு பலமுறை அதிகாரிகைள கேட்டும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து வருகின்றன.
இப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்தவத்தை அறிந்து கொண்ட பின்னர் இலங்கை மின்சார சபையின் அலதெனிய அலுவலகத்தில் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்து இது தொடர்பாக தகவல் கோர திட்டமிட்டனர். அதன்படி 2018.11.04 ஆம் திகதி குறித் மின்சார சபை காரியாலயத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து தகவல் கோரினர். ஆனாலும் அந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கப்படவில்லை
எவ்hறாயினும் ஒருநாள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் விண்ணப்பதாரியை தொலைபேசியில் அழைத்து மேலும் சில தகவல்களை கோரியுள்ளார் ஆனாலும் தகவல் அறிவதற்கான சட்டத்தில் குறிபிடப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரியின் கோரிக்கைக்கு மின்சார சபை அலுவலகம் உரிய காலத்தில் முறையாக பதிலளிக்க தவறிவிட்டது. இதில் இருந்து இவ்வாறான அதிகாரிகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் தொடர்பாக போதுமான அறிவு இல்லாததால் இச்சட்டத்திற்கு மதிப்பளிக்க தெரியாது என்ற விடயம் புலனாகின்றது.
அதனால் தகவல் சட்டம் தொடர்பாக அறிவூட்டல்கள் செய்யவும் மக்களை அது தொடர்பாக விழிப்படையச் செய்யவும் வேண்டிய தேவை உணரபப்டுகின்றது. அதனால் தகவல் சட்டம் பற்றி அறிந்துள்ள இளைஞர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி இலங்கை மின்சார சபை அலுவலகத்தில் சமர்ப்பித்த விண்ணப்பம் தொடர்பான இந்த தகவலை சமர்ப்பித்தனர்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *