News

RTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்

By In

மாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டதால் அப்பிரதேசத்தில் வாழும் 500 குடியிருப்பாளர்கள் அளவில் இவ்வாறு சிரமங்களை அனுபவிக்க நேரிட்டிருக்கின்றது.
நிறுத்தப்பட்டுள்ள பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்கச் செய்வதற்காக அப்பிரதேச மக்கள் பல இடங்களுக்கு கடிதங்கள் எழுதியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தகவல் அறிவதற்கான சட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டதும் அப்பகுதி மக்கள் இந்த பகுதி பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டமைக்கான காரணம் பற்றிய தகவலை உடகம பஸ் டிப்போவில் இருந்து கோருவதற்கு தீர்மானித்தனர். 2018 டிசம்பர் மாதம் தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் உடகம டிப்போவில் கையளிக்கப்பட்டது. தகவல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் பதில் எதனையும் டிப்போ வழங்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக மேன்முறையீட்டு அதிகாரிக்கு மேலும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான பதிலை எதிர்பார்த்தனர். ஆனாலும் அதற்கும் அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இவ்விடயத்தில் அதிகாரிகளின் கண்கள் குருடான நிலையே காணப்பட்டது.
இருந்தாலும் குடியிருப்பாளர்கள் இந்த விடயம் தொடர்பாக அவ்வளவாக திருப்தியை வெளியிடவில்லை. அவர்களது பிரச்சினைக்கு அதிகாரிகளால் தகவல் சட்டத்தின் அடிப்படையிலும் உரிய பதில் வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். ஆனாலும் அவர்களால் ஒரு விடயத்தில் திருப்தி அடைய முடிகின்றது. அதாவது முன்பை விட இப்போது அச்சமின்றி அதிகாரிகளிடம் வினா எழுப்புவதற்கு தகவல் அறிவதற்கான சட்டம் உதவியாக அமைவதால் ஒரு நாள் அவர்களது பிரச்சினைக்கு இச்சட்டத்தால் பதில் கிடைக்கலாம் என்று நம்புகின்றனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பற்றி அறிந்து கொண்டவுடன் அந்த சட்டத்தை பன்படுத்தி தகவல் கோரிய விடயம் பற்றி சமர்ப்பித்த பதிவு இதுவாகும்.

“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *