News

வன பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவல் தாமதங்கள்

By In

சரியான தகவலின் பண்புகள் என்ன? அது துல்லியமான, பொருத்தமான, முழுமையான, தெளிவான, நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.

கோரப்பட்ட தகவல் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவைப் பற்றி ஒரு தகவல் அதிகாரி தகவல் கோருபவருக்கு பதினான்கு வேலை நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று தகவல் உரிமைச் சட்டம் கூறுகிறது. ஆகையால், ஒரு தகவல் அறியும் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட பொது அதிகாரத்திடமிருந்து ‘முடிவு நிலுவையில்’ கடிதத்தைப் பெற காத்திருக்க வேண்டிய அதிகபட்ச நேரம் இதுவாகும்.

ஆனால் இது எப்போதும் இவ்வாறு நடப்பதில்லை. தகவல் கோருபவர் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த விதமான பதிலும் பெறாமல் காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம். ஆயினும் ஒருவர் காலவரையின்றி தகவலுக்கு காத்திருக்க முடியாது; இதனால் மேன்முறையீடு செய்ய வேண்டிய அவசியமும் எழுகிறது. சிங்கராஜ மழைக்காடு தொடர்பான தகவல்களைக் கோரி இலங்கையின் வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தகவல் அறியும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தது இதுவே.

தாமதமாக பதிலளிப்பதால் தகவல் காலாவதியாகிவிடக்கூடும் என்பதால், தேவையான தகவல்களை நேரத்துடன் பெறுவது கோரிக்கையாளருக்கு முக்கியமானதே. காலாவதியாகிய தகவல் கோரிக்கையாளருக்கு பயனளிக்காமல் போய்விடக்கூடும்.

சில அரசாங்க அதிகாரிகள் நாங்கள் தகவல்களைக் கேட்கும்போது அதற்கேற்றவாறு சிறப்பாக செயல்படுகின்றனர் என்பதும் உண்மைதான். என்றாலும், ஒவ்வொரு பொது அதிகாரமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் முயற்சிப்பது முக்கியமாகும்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *