மட்டக்ளப்பு சந்தியில் வாவிக்கரை வீதி மற்றும் கல்லடி வீதியில் வசிக்கும் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒழுங்கான வடிகாலமைப்பு வசதி இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான வடிகான் திட்டம் காரணமாக மழை காலங்களில் கல்லடி குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுவதால் கடுமையான பாதரிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. நீர் வடிந்து செல்லாமல் தேங்கி நிற்பதால் வெளிப்பகுதிகள் மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகின்றது.
பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டம் (USAID) மற்றும் SDGAP இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. இந்த செயலமர்வில் மட்டக்களப்பு பகுதி இளைஞர்களும் பங்குபற்றினர். அவர்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர்.
அதன் பிரதி பலனாக குறித்த மாநகர சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து மோசமான வடிகாண் பற்றியும் சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் பற்றியும் தகவல் கோரினர்.
ஆனாலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு உரியவர்களிடம் இருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பான மேன்முறையீடு செய்ய அல்லது மீண்டும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து தகவல் கோருவதென்று தீர்மானித்தனர்.
அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக மௌனம் சாதித்தனராயினும் குறிப்பிட்ட குறைபாடு தொடர்பாக அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு தகவல் சட்டம் உதவியாக இருப்பது குறித்து அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் தேவைப்படும் போது தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த அவர்கள் தீட்டமிட்டுள்ளனர்.
தகவல் அறிவதற்கான சட்டம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியதாக கருதுகின்றனர். இந்த விடயம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர்களால் சமாப்பிக்கப் பட்டதாகும்.
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…
ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!
● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போசாக்கு கொடுப்பனவிலும் முறைகேடுகள்?
க.பிரசன்னா கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி அரசாங்கத்தால் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு…
Recent Comments