News

மத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு டிசம்பர் 22 ஆம் திகதி கண்டி டெவோன் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 122 ஊடகவியலாளர்கள் அளவில் கலந்துகொண்டனர்.

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் வெவ்வேறாக நடத்தப்பட்ட இரண்டு செயலமர்வுகளில் சிங்கள மொழி மூலமான செயலமர்வை கமல் லியனாரச்சி, திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் நடத்தினர். தமிழ் மொழி மூலமான செயலமர்வை சட்டத்தரணி ஐங்கரன் மற்றும் மாதுரி தமிழ்மான் ஆகியோர் நடத்தினர்.

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டமானது ஜனநாயகத்தை மதிக்கும் மக்களது வெற்றியாகும். 1998 ஆம் ஆண்டின் கொழும்பு பிரகடனம், ஊடக சமூகத்தினதும் சட்டத்துறையினரதும் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக இச்சட்டம் 2017 பெப்ரவரியில் அமுலுக்கு வந்தது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த போராட்டத்தில் முக்கியமான பங்களிப்பை செய்திருக்கின்றது.

பிரசைகளுக்கு தகவல் அறிவதற்கு இருக்கின்ற வரலாற்று முக்கியத்தவத்தை உணரச் செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தகவல் அறிவதற்கான சட்டம் உலகில் இச்சட்டம் நடைமுறையில் உள்ள 10 சிறந்த தகவல் சட்டத்தைக் கொண்டுள்ள நாடுகள் வரிசையில் ஒன்றாக இலங்கை இருக்கின்றது. இருந்தாலும் மக்கள் மத்தியில் பல தவறான அபிப்பிராயங்களும் பிழையான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால் பிரசைகளின் தகவல் அறிவதற்கான உரிமையை பாதுகாக்கும் வகையில் “சிற்நத சட்டமாக” அறிமுகப்படுத்தி மக்கள் இந்த சட்டத்தின் மூலம் அதிகபட்ச நன்மைகளை அடையும் வகையில் அதற்காக கூடுதலான அவதானத்தை செலுத்தி மக்களை விழிப்படையச் செய்யும் செயற்பாடுகளை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் முன்னெடுத்து வருகின்றது.

தகவல் அறிவதற்கான சட்டத்தை மக்களிடம் கொண்டு போவதற்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் முறையாக திட்டம் வகுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இதன் மற்றுமோர் அங்கமாக மாவட்டங்கள் தேர்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வுகளை நடத்துவதும் நடைபெற்று வருகின்றது. காலி மற்றும் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. அவ்வாறே கொழும்பை மைய்யப்படுத்திய ஊடகவியலாளர்களுக்காக வெவ்வெறான செயலமர்வுகளும் நடத்தப்பட்டு இச்சட்டம் பற்றிய விரிவான அறிவூட்டல்கள் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள மும் மொழிகளிலுமான வழிகாட்டல் கையேடும் இந்த செயலமர்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன் பிரதிகள் தகவல் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. அவ்வாறே தகவல் அறிவதற்கான சட்டம் தொடர்பாக மேலும் அறிவூட்டல்களை செய்யும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *