News

போலிச் செய்திகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றீர்களா?

By In

உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வேளையில், நாம் போலி செய்திகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டிருப்பது இரகசியமல்ல. குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இதைப் பற்றி அறிந்திருப்பார்கள். போலிச் செய்திகள் பெரும்பாலும் பகிரப்படும் தளங்களில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்றாகும். உலகில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் பேர் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் இலங்கையில் கிட்டத்தட்ட 32 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. அடையாளம் தெரியாத குழுக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை உருவாக்கி அவற்றை நண்பர்கள் மத்தியில் பரப்புகின்றன. மறுபுறம், சில பயனர்கள் மற்றவர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர். 

எனவே, மேற்கூறிய விடயங்கள் குறித்த விளக்கங்களையும் மேலதிக தகவல்களையும் பெறுவதற்காக 25/05/2021 அன்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு CERT I cc இற்கு தகவலறியும் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல் அறியும் விண்ணப்பத்தினை  அனுப்பினோம். தகவலறியும் விண்ணப்பத்தைப் பற்றி குறிப்பிடுகையில், போலி இணைப்புகளை கொண்ட செய்தி (Spam) என்றால் என்ன என்று கேட்டோம். “பெரும்பாலும் வர்த்தக ரீதியான, பயனரால் ஒருபோதும் கோரபடாத பேராளவான தேவையற்ற செய்திகளாகும்” என CERT நிறுவனம் பதிலளித்திருந்தது. இந்த செய்திகளில் பெரும்பாலானவற்றில், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுகின்றன, சில சந்தர்ப்பங்களில் உங்கள் நிதித் தகவல்களும் கோரப்படுகின்றன. பொதுவாக, இதுபோன்ற தேவையற்ற செய்திகளை நீங்கள் மின்னஞ்சல் வழியாகப் பெறுவீர்கள், மேலும் இதுபோன்ற செய்திகளை பார்ப்பது உங்கள் கணினி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் தீம்பொருள்(Malware) தாக்கத்திற்கு உட்படக்கூடும் என்று CERT கூறுகிறது. 

2020 முதல் 2021 வரை பகிரப்பட்ட போலி இணைப்புகளை கொண்ட செய்திகள் (Spam) ஏதேனும் வந்துள்ளதா என்று நாங்கள் கேட்டோம். போலி இணைப்புகளை கொண்ட செய்திகளில் (Spam), CERT ஒரு தனி வகைப்பாட்டை செய்யவில்லை என்றும் அது கீழே உள்ள அட்டவணையின்படி தகவல்களை சேகரித்துள்ளது என்றும் CERT பதிலளித்தது. 

Incident TypeNo. of Incident
DDOS1
Ransomware18
Malicious software issue9
Phone hacking6
Scams109
Phishing15
Website compromise76
Financial / email frauds55
Intellectual property violation1
Server compromised1
Social media14284
Other35

இதன் தொடர்ச்சியாக, இதுபோன்ற செய்திகளின் தாக்கங்களை பொதுமக்கள் மதிப்பிடுவதற்கும், கோரப்படாத போலிச் செய்திகளிற்கு  எதிராக செயற்படுவதற்கும் ஏதேனும் திட்டம் உள்ளதா என்று தகவலறியும் கோரிக்கை மூலம் CERT நிறுவனத்திடம்  வினவியபோது இது சம்பந்தமாக, பொது விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதே இந்த சிக்கல்களுக்கான சிறந்த நடவடிக்கை என்றும், அவ்வப்போது பொது விழிப்புணர்வு அமர்வுகளை CERT நடத்துகிறது என்றும் CERT வலியுறுத்தியுள்ளது. மேலும், CERT மேற்கொண்ட திட்டங்களை அந்தந்த சமூக ஊடக தளங்களில் பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய இணைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த தகவல்களை தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் CERT தெரிவித்துள்ளது

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *