News

பொது போக்குவரத்தின் கட்டுப்பாடுகள்

By In

கொட்டாஞ்சேனையில் வசிப்பவர்கள், குறிப்பாக பொது போக்குவரத்தை நம்பியிருப்பவர்கள், கொட்டாஞ்சேனை கொமர்ஷல் வங்கியின் முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தைச் சுற்றி மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டிருப்பார்கள். கடந்த பல ஆண்டுகளில், இந்த பஸ் தரிப்பிடத்தில் ‘102’, ‘112’ மற்றும் ‘168’ பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது இவ்விடத்தில் ஒரு கொட்டாஞ்சேனை பஸ் வண்டியை காண்பதே அரிது.

கொட்டாஞ்சேனையிலிருந்து சில முக்கிய இடங்களுக்குச் செல்ல விரும்பும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய பேருந்துகள் பற்றி அறிய, ஒரு தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபைக்கு அனுப்பப்பட்டது.

தற்போது எத்தனை 102 (மொரட்டுவ முதல் கொட்டாஞ்சேனை) பேருந்துகள், 112 (மஹரகம முதல் கொட்டாஞ்சேனை) பேருந்துகள் மற்றும் 168 (நுகேகொட முதல் கொட்டாஞ்சேனை) பேருந்துகள் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கென ஒதுக்கப்பட்டுள்ளன என தகவல் அறியும் விண்ணப்பம் கேள்வி எழுப்பியது. மேலும், பஸ் புறப்படுவதற்கும் அடுத்த பஸ்ஸின் வருகைக்கும் இடையில் நீண்ட இடைவெளிகளை பலர் அனுபவித்ததாக அறியப்படுவதால், மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபையிடம் இப்பேருந்துகள் ஒவ்வொன்றிற்கும் திட்டமிடப்பட்ட வருகை மற்றும் புறப்படும் நேரங்கள் (காலை முதல் இரவு வரை) குறித்து கேட்கப்பட்டது.

மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபை வழங்கிய தரவுகளின்படி, தற்போது ஒரு 112 பேருந்து மற்றும் ஒரு 168 பேருந்து உள்ளது. 102 பேருந்துகளைப் பொறுத்தவரை, தற்போது ஒன்றேனும் இயக்கப்படவில்லை.

கொட்டாஞ்சேனை பஸ் தரிப்பிடத்திலிருந்து 112 பேருந்து முதலில் காலை 7.45 மணிக்கு புறப்படுகிறது; இதனை அடுத்து மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. மஹரகம பஸ் தரிப்பிடத்திலிருந்து அதன் கடைசி திரும்பு நேரம் (turn time) காலை 9.15 மணி ஆகும்.

கொட்டாஞ்சேனையிலிருந்து 168 பஸ் புறப்படும் நேரம் காலை 7.30 மணி என அறிவிக்கப்பட்டதுடன், நுகேகொட தரிப்பிடத்திலிருந்து அதன் கடைசி திரும்பு நேரம் மாலை 5 மணி ஆகும்.

மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபையிடமிருந்து இந்த தகவல் கோரப்பட்ட காலம் 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *