News

பொதுமக்களுக்கு தகவல் அறிய உதவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை

By In

இலங்கையில் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம் நாட்டின் குடிமக்களுக்கு அரசாங்க காரியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்களின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இன்றுவரை, தகவல் அறியும் உரிமை குறிப்பிடத்தக்க சில பயனுள்ள முடிவுகளுடன் வெவ்வேறு வகையான மக்களால் நல்ல பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை விண்ணப்பதாரர்களிடம் நன்றாக பதிலளிப்பரென்று சொல்லக்கூடிய பொது அதிகாரங்களில் சில மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை போன்றவையாகும். இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன் பயன்பாடு போன்ற விடயங்களைப் பற்றிய தகவல்களை மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கியுள்ளது. அத்துடன் வீதிகள், வடிகால்கள் (drainage) மற்றும் குப்பை சேகரிப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கொழும்பு மாநகர சபை பதிலளித்துள்ளது.

மற்றொரு முன்னோக்கில், தகவல் அறியும் விண்ணப்பங்களைப் பெறுவது அரசாங்க அமைச்சகங்களுக்கும் திணைக்களங்களுக்குமே உதவக்கூடும். ஒரு குறிப்பிட்ட பொது அதிகாரத்தின் கீழ் வரும், அவ்வதிகாரத்தால் முன்னரே அறியப்படாத  ஒரு விடயத்தைப் பற்றி ஒரு தகவல் கோரிக்கையாளர் விசாரிக்கும் போது, குறிப்பிட்ட பொது அதிகாரத்தின் கவனம் அவ்விடையத்திடற்கு கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு, அப்பொது அதிகாரி உடனடியாக இவ்விடையத்தைக் கவனித்து செயல்பட முடியும்.

ஆர்வமுள்ள குடிமக்களான எம்மைப் பொறுத்தவரை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு விலைமதிப்பற்ற கருவியாகும். இக்கருவி எங்களுக்கும் ஏனையோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதொன்றாகும். மேலும், அனைத்து வகையான பொது அதிகாரங்களும் தங்கள் கடமைகளை கூடியளவு சிறந்த வகையில் நிறைவேற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு தூண்டுகோலாக செயல்படுகின்றது.

News

இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்

க. பிரசன்னா பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்…

By In
News

யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…

By In
News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *