News

பொதுமக்களுக்கு தகவல் அறிய உதவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை

By In

இலங்கையில் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம் நாட்டின் குடிமக்களுக்கு அரசாங்க காரியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்களின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இன்றுவரை, தகவல் அறியும் உரிமை குறிப்பிடத்தக்க சில பயனுள்ள முடிவுகளுடன் வெவ்வேறு வகையான மக்களால் நல்ல பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை விண்ணப்பதாரர்களிடம் நன்றாக பதிலளிப்பரென்று சொல்லக்கூடிய பொது அதிகாரங்களில் சில மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை போன்றவையாகும். இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன் பயன்பாடு போன்ற விடயங்களைப் பற்றிய தகவல்களை மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கியுள்ளது. அத்துடன் வீதிகள், வடிகால்கள் (drainage) மற்றும் குப்பை சேகரிப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கொழும்பு மாநகர சபை பதிலளித்துள்ளது.

மற்றொரு முன்னோக்கில், தகவல் அறியும் விண்ணப்பங்களைப் பெறுவது அரசாங்க அமைச்சகங்களுக்கும் திணைக்களங்களுக்குமே உதவக்கூடும். ஒரு குறிப்பிட்ட பொது அதிகாரத்தின் கீழ் வரும், அவ்வதிகாரத்தால் முன்னரே அறியப்படாத  ஒரு விடயத்தைப் பற்றி ஒரு தகவல் கோரிக்கையாளர் விசாரிக்கும் போது, குறிப்பிட்ட பொது அதிகாரத்தின் கவனம் அவ்விடையத்திடற்கு கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு, அப்பொது அதிகாரி உடனடியாக இவ்விடையத்தைக் கவனித்து செயல்பட முடியும்.

ஆர்வமுள்ள குடிமக்களான எம்மைப் பொறுத்தவரை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு விலைமதிப்பற்ற கருவியாகும். இக்கருவி எங்களுக்கும் ஏனையோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதொன்றாகும். மேலும், அனைத்து வகையான பொது அதிகாரங்களும் தங்கள் கடமைகளை கூடியளவு சிறந்த வகையில் நிறைவேற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு தூண்டுகோலாக செயல்படுகின்றது.

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *