News

பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் 5 வருடம்; 2017-2022

By In

உலகளாவிய தகவல்  அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு 2022 செப்டெம்பர் 26 அன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) ‘பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள்; 2017-2022’ என்ற தலைப்பில் இணையவழி குழு கலந்துரையாலை நடாத்தியிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில், இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஜூலியஸ் & க்ரீசியின் சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மகிந்தாரத்ன மற்றும் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சட்ட ஆலோசகரும் ஆய்வாளருமான அஷ்வினி நடேசன் ஆகியோர் பேச்சாளர்களாகவும், சட்டத்தரணியும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான திரு. ஜாவிட் யூசுப் அவர்கள் நெறியாளராகவும் கலந்துகொண்டனர். 

‘இலங்கையின் RTI பயணத்தின் வெற்றிகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன அவர்கள் பேசும் போது, ‘இலங்கையின் RTI பயணத்தின் சாதனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது, இலங்கையின் பிரஜைகள் கடந்த ஐந்து வருடங்களில் RTI சட்டத்தை பயன்படுத்தி தமது சமூகத்தை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். உரையாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரசாந்தி மகிந்தாரத்ன குறிப்பிடுகையில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசாங்கமும் பிரஜைகளும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) சாதனையை நோக்கி பயணிக்க உதவும் ஒரு பாலமாகும். ஆனால் பொது அதிகாரிகளோ அல்லது பிரஜைகளோ வெளிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி தொடர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது கடக்கப்படாத பாலமாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமையின் பயன்பாட்டிற்கும் ஊழலை குறைப்பதற்கும் அல்லது வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அஷ்வினி நடேசன், RTI ஊடாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலியுறுத்தியதோடு குறுகிய காலத்தில் இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். 

இவ் இணையவழி கலந்துரையாடலானது, Media Reform Lanka  இனால் வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களினதும் அதாவது, “இலங்கை தகவல் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணைகளுக்கான வழிகாட்டி (2017-2021)”; “இலங்கையின் தகவல் அறியும் உரிமையின் ஆட்சி மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள்: பிரதிபலிப்புக்கான சிந்தனைகள்”; மற்றும் “இலங்கையின் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணைகளுக்கான சட்ட விளக்கங்கள்; 2019 – 2021”, போன்றவற்றின் வெளியீட்டையும் குறித்தது. இந் நூல்கள் கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன, நிவேதா ஜெயசீலன் மற்றும் இன்ஷிரா ஃபாலிக் ஆகியோரால் திருத்தப்பட்டது. 

முழு காணொளிக்குமான இணைப்பு

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *