News

பிப்ரவரி 16, 2023 அன்று நடைபெற்ற RTI ஊடகவியலாளர் மன்றத்தின் சிறப்பம்சங்கள்

By In

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவித் திட்டத்தின் (DAP – Direct Aid Programme) அனுசரணையுடன் SLPI RTI ஊடகவியலாளர் மன்றத்தினை ஏற்பாடு செய்திருந்தது. இது பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மதியம் 1.30 முதல் மாலை 3.30 மணி வரை இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் பல பாகங்களிலும் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை வினைத்திறனுடன் பயன்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இம் மன்றம் 2018 ஆம் ஆண்டு முதல் மாதாந்தம் நடைபெற்றது. இம் மன்றத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் தற்போதைய நிலவரம், சட்டத்தினை பயன்டுத்தும் போது எதிர்கொண்ட சவால்கள், கோரிக்கைகளுக்கு பொது அதிகாரசபைகள் வழங்கிய பதில்கள், பெறப்பட்ட தகவல்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்துதல், மக்களுக்கு RTI சட்டத்தினூடாக எவ்வாறு சேவை செய்ய முடியும் என பல தலைப்புக்களில் உரையாடுவர். தொடர்ச்சியாக நேரடியாக இடம்பெற்று வந்த இம் மன்றம் கொவிட் பெருந்தொற்றின் பின்னர் இணைவழியினூடாக நடைபெற்றது. தொற்று சற்றுத் தணிந்துள்ள இந் நாட்களில் மூன்று மாதங்களிற்கு ஒரு முறை கூடுவதற்கு திட்டமிட்டுள்ளது. 

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான மன்றம் பெப்ரவரி மாதம் கூடியிருந்தது. வருகைதந்தோரின் அறிமுகத்தோடு ஆரம்பமாகி மன்றம் பற்றிய அறிமுகமும்  “Spotlight Journalist of the Forum” தெரிவும் இடம்பெற்றது. இந்த “Spotlight Journalist of the Forum” என்பது மன்றத்தின் உறுப்பினராகிய ஊடகவியலாளர் ஒருவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி பெறப்பட்ட தகவல், அந்தத் தகவலை பெறுவதற்கு அவர் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டார், எதிர்கொண்ட சவால்கள் என்ன போன்ற விடயங்களை பகிர வேண்டும். இவ்வாறு பகிரும் போது ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் அது ஒரு தூண்டுகோளாக அமைவதோடு குறித்த ஊடகவியலாளர் ஏனைய ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வார். 

இம் மாத “Spotlight Journalist” ஆக தமிழ்மிரர் பத்திரிகையின் ஊடகவியலாளர் நிரோஷ்குமார் இணைந்து கொண்டு தமது அளிக்கையினையும் வழங்கியிருந்தார். 

அதனைத் தொடர்ந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆலோசகர் அஷ்வினி நடேசன் அவர்கள் தகவலறியும் உரிமை மற்றும் “நிலையான அபிவிருத்தி இலக்குகள்” எனும் தலைப்பில் தனது அளிக்கையினை வழங்கியிருந்தார். கேள்வி பதில் பகுதியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கியிருந்தார். 

பங்குபற்றியிருந்த பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பியும் தமது கருத்துகளை வெளிப்படுத்தியும் மன்றத்தில் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *