News

பாதையைக் கடப்பதா? இல்லையா?

By In

வீதியைக் கடப்பது கொழும்பில் எந்நேரமும் ஒரு ஒழுங்கான முறையில் நடைபெறும் செயல் அல்ல. இருப்பினும் நகரின் சில பகுதிகளில், முக்கிய வீதிகளில், வீதியின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் கடக்கும் பாதசாரிகளின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக மக்களால் “வண்ண விளக்குகள்” (colour lights) என்று அழைக்கப்படுகின்ற பெடஸ்ரியன்ஸ் க்ரொஸிங்ஸ் (pedestrians   crossings) நிறுவப்பட்டுள்ளன.

 

ஆளிகளால் இயக்கப்படும் இந்த உபகரணங்கள் எவ்வாறு திட்டமிடப்பட்டு இயக்கப்படுகின்றன? மேலும், பல ஆளிகள் உடைந்து அல்லது காணாமல் போயுள்ளதுடன் சில சமயங்களில் இந்த ஆளிகளைக் கொண்ட பேனல்கள் (panels) கூட நொறுக்கப்பட்ட நிலையில் காணப்படுவது ஏன்? குறிப்பாக உச்ச வாகன நெரிசல் உள்ள நேரங்களில் இது எந்த அளவிற்கு பிரச்சினையாக உள்ளது?

பாதசாரிகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளின் இந்த குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி மேலும் அறிய, ஒரு தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் கொழும்பு மாநகர சபைக்கு அனுப்பப்பட்டு பின்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

ஒரு பாதசாரி கடக்க வேண்டியிருக்கும் போது, ​​அவர்கள் முதலில் ‘Push’ ஆளியை அழுத்த வேண்டும். வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ‘பச்சை’ நேரம் (green time) ஏற்கனவே கடந்துவிட்டால், பாதசாரி சாலையைக் கடக்கலாம் என்பதைக் குறிக்கும் ‘பச்சை மனிதன்’ சமிக்ஞை ஒளிரும். இது, 3 வினாடி செம்மஞ்சள் விளக்கு (amber light) நேரத்திற்குப் பின், வாகனங்களை நிறுத்துவதற்கு சமிக்ஞை செய்யும் சிவப்பு விளக்கு வருவதற்கு முன்பு, நிகழும்.

இந்த பச்சை மனிதன் சமிக்ஞை ஒளிரும் நேரம் பிரதானமாக வீதியின் அகலத்துடனும் வீதி இருக்கும் இடத்துடனும் மாறுபடும். இது பொதுவாக 10 – 20 வினாடிகள் நீடிக்கும்.

‘Push’ ஆளியை அழுத்தியதும், வாகனங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச பச்சை நேரம் இன்னும் முடிவடையவில்லை என்றால், பாதசாரி அது முடியும் வரை காத்திருக்க வேண்டும். வாகனங்களுக்கான குறைந்தபட்ச பச்சை நேரமும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்; இந்த காலம் பொதுவாக 40 வினாடிகள் முதல் 90 வினாடிகள் வரையான காலமாக இருக்கும்.

பாதசாரி நிற்கும் பக்கத்தில் (நடைபாதையில்) உள்ள ஆளி செயல்படவில்லை என்றால், அப்பாதசாரியிற்கு எதிர்பக்க நடைபாதையில் உள்ள ஆளியில் அவர் தங்கி இருக்க வேண்டும். பராமரிப்பு ஒப்பந்தக்காரர் (maintenance contractor) வழக்கமான வருகைகளின் போது சேதமடைந்த ஆளிகள் மற்றும் ஆளி பேனல்களைப் பற்றி அறிந்து கொள்கிறார். அல்லது சமிக்ஞை கம்பத்தில் வழங்கப்பட்டுள்ள எண்ணுக்கு பொது மக்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இவற்றைப் பற்றி அறிந்து கொள்கிறார். (இரண்டு பராமரிப்பு ஒப்பந்தக்காரர்களின் தொலைபேசி எண்கள் சமிக்ஞை கம்பத்தில் வழங்கப்பட்டிருக்கும்.) அவ்வழியிலுள்ள போக்குவரத்து பொலீசாரும் ஒப்பந்தக்காரரை தொடர்பு கொண்டு அவருக்கு தெரிவிப்பார்கள்.

கொழும்பு மாநகர சபை மேலும் குறிப்பிடத்தக்க சில விடயங்களை வழங்கியது. அவர்களின் படி, சில இடங்களில் ஆளி பேனல்களும் சேதம் செய்யப்பட்டுள்ளன (vandalised). இது ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அடிக்கடி நடந்து வந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.

இருப்பினும், சில பிரச்சினைகளைக் குறைப்பதற்காக தடுப்புகள் (deterrents) ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இவ்வுபகாரணத்தில் போலியான பச்சை மனிதன் சமிக்ஞைகள் தோன்றுவதைத் தடுக்க, சில இடங்களில் பாதசாரி கண்டறிதல் கேமராக்கள் (pedestrian detector cameras) பொருத்தப்பட்டுள்ளன.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *