News

பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பிரஜைகள் தகவல்களை கோரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

By In

கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் விளைவாக, 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலாகியது. அதன்படி, பொதுமக்களுக்கு பரந்துபட்ட விடயங்களில் வெளிப்படையான தகவல்களைப்  பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்பை 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம்  வழங்குகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் தகவல் அறியும் உரிமையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். 

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களின் புரிதலை அறிந்து கொள்வதற்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தனது சமூக ஊடகத் தளங்களில் தொடர்ச்சியான கருத்துக் கணிப்புகளை ஆரம்பித்தது. அதன்படி, வாக்கெடுப்பின் ஆரம்பத்தில், பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பிரஜைகள் தகவல்களை கோரலாமா? என்று வினவப்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கு ஒரு வாரம் கருத்து தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

வாக்கெடுப்புகளின் முடிவுகளின்படி, பதிலளித்தவர்களில் 76% பேர் ஒரு பிரஜையாக எந்தவொரு பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற முடியும் என்று தங்களுக்குத் தெரியும் என்றும் 24% பேர் ஒரு பிரஜையாக எந்தவொரு பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற முடியும் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். முடிவுகள் பின்வருமாறு. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 இன் விதிகளின்படி, ஒரு பகிரங்க அதிகாரசபை வசமுள்ள, நம்பிக்கை அல்லது கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை அணுக பொதுமக்களுக்கு உரிமை உண்டு. மேலும், தகவல் சுதந்திரச் சட்டத்தின் பிரிவு 43 ஆனது பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுக்கிறது. 

பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான புரிதலைப் பெற, நாம் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளை பின்வரும் இணைப்பு வழியாக பார்வையிடலாம்.

https://bit.ly/34AQStw

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *