News

நொச்சியாகம மாற்று வழிப்பாதை நிர்மாணம் பற்றிய தகவல் அறிய தகவல் சட்டம் உதவியது

By In

பாதைகளின் பராமரிப்புக்கும் அபிவிருத்திகுமாக வருடாந்தம் மில்லியன் கணக்கிலான நிதி ஒதுக்கப்பட்டாலும் இலங்கையின் பல பகுதிகளில் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
நொச்சியாகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக ஜயகம பகுதிக்கான பாதை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருக்கின்றது. அதிலும் தொம்பலகம மற்றும் ஓழுவெவ பிரதேச செயலக பகுதி பாதைகள் மிகவும் மோசமானதாக உள்ளன. குன்றும் குழியுமாக உள்ள பாதைகளை குறைத்த பட்சம் திருத்தி சிரமம் இன்றி பயணம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு தெயட கிருல கண்காட்சி நடைபெற்றபோது தற்காலிக நிவாரணமாக பாதைகள் அரசாங்கத்தால் பழுது பார்க்கப்பட்டன. இருந்தலும் பிரத்தியேகமான மாற்று வழிப்பாதை திருத்தப்படவில்லை. மொரவக கந்த மற்றும் முதிதகம ஆகிய பாதைகள் ஏழு கிலோமீட்டர் தூரமானகதாக இருந்தபோதும் 200 மீட்டர் தூரத்திற்கு மாத்திரமே கொங்ரீட் போடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க உதவித் திட்டத்துடன் இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி பயிற்சி செயலமர்வொன்றை நடத்தியது. அந்த செயலமர்வில் பங்குபற்றிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று நொச்சியாகம பிரதேச பாதைகளை நிர்மாணிக்கவும் பராமரிக்கவும் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்ற தகவல்களை அறிவதற்காக தகவல் அறிவதற்கான சட்டத்தை பன்படுத்தி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பம் சமர்ப்பித்தனர்.
ஆந்த விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசாங்கத்தால் பாதை அபிவிருத்திக்காக 64,00000 ருபா அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் நொச்சியாகம பிரதேச சபைக்கு எந்தவிதமான நிதியும் வழங்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான பணம் விடுவிக்கப் பட்டிருக்கவில்லை
தகவல் கேரிய இளைஞர்களுக்கு தகவல் அறிவதற்கான சட்டம் நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பாதை புணரமைப்பு வேலைகளின் தாமதத்திற்கான காரணம் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக அமைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அது தொடர்பாக கேள்வி எழுப்பவும் தகவல் சட்டம் பயன்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் இதன் நன்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி மக்களை அறிவூட்டல் செய்ய வேண்டும் என்றும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய ஒருவரால் சமர்ப்பிக் கப்பட்டதாகும்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *