News

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டமாகும்.

எவ்வாறாயினும், தகவல் அறியும் படிவத்தில் கோரிக்கையாளர் அணுகலை விரும்பும் மொழி குறிப்பிடும்போது ஒரே விதமான அனுபவம் பல முறை பெறப்பட்டுள்ளது; படிவத்தில் கூறப்பட்ட மொழியை/மொழிகளைக் காட்டிலும் ‘முடிவு நிலுவையில் உள்ளது’ (decision pending) கடிதம் மற்றும் தகவல்களைக் கொண்ட பதில் கடிதம் ஆகிய இரண்டுமே விண்ணப்பப் படிவத்தில் கூறியதைத் தவிர வேறு மொழியில் கோரிக்கையாளரால் பெறப்பட்டுள்ளன.

கோரப்பட்ட மொழி தமிழ் அல்லது ஆங்கிலமாக இருக்கும்போது இது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நடந்ததுள்ளது என்று அறியப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், அரச அமைச்சகம் அல்லது திணைக்களத்திலிருந்து பதில் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்குமாறு கோரும் ஒரு விண்ணப்பதாரருக்கு பதில் சிங்களத்தில் கிடைக்கின்றது. உதாரணமாக, கொழும்பில் பிச்சைக்காரர்கள் தொடர்பான தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு பதிலளித்த போது இந்நிலைமை ஏற்றப்பட்டது; அவர்களின் பதில் சிங்களத்திலேயே பெறப்பட்டது. கொழும்பு மாநகரசபையிலிருந்து தெரு விளக்குகள் செயல்படுவதைப் பற்றிய கேள்வி கேட்கும்போதும் நடந்தது இதுவே.

தகவல் கோருபவர் கூறும் மொழியில் தகவல்களை வழங்க முடிகிறது என்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பொது அதிகாரத்தினதும் பொறுப்பல்லவா? அப்படியானால், மூன்று மொழிகளிலும் தகவல் கோரிக்கைகளை கையாளும் திறனுக்காக போதுமான தகவல் அதிகாரிகள் மற்றும்/அல்லது மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதில் இந்த பொது அதிகாரிகள் என்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்?

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *