News

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டமாகும்.

எவ்வாறாயினும், தகவல் அறியும் படிவத்தில் கோரிக்கையாளர் அணுகலை விரும்பும் மொழி குறிப்பிடும்போது ஒரே விதமான அனுபவம் பல முறை பெறப்பட்டுள்ளது; படிவத்தில் கூறப்பட்ட மொழியை/மொழிகளைக் காட்டிலும் ‘முடிவு நிலுவையில் உள்ளது’ (decision pending) கடிதம் மற்றும் தகவல்களைக் கொண்ட பதில் கடிதம் ஆகிய இரண்டுமே விண்ணப்பப் படிவத்தில் கூறியதைத் தவிர வேறு மொழியில் கோரிக்கையாளரால் பெறப்பட்டுள்ளன.

கோரப்பட்ட மொழி தமிழ் அல்லது ஆங்கிலமாக இருக்கும்போது இது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நடந்ததுள்ளது என்று அறியப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், அரச அமைச்சகம் அல்லது திணைக்களத்திலிருந்து பதில் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்குமாறு கோரும் ஒரு விண்ணப்பதாரருக்கு பதில் சிங்களத்தில் கிடைக்கின்றது. உதாரணமாக, கொழும்பில் பிச்சைக்காரர்கள் தொடர்பான தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு பதிலளித்த போது இந்நிலைமை ஏற்றப்பட்டது; அவர்களின் பதில் சிங்களத்திலேயே பெறப்பட்டது. கொழும்பு மாநகரசபையிலிருந்து தெரு விளக்குகள் செயல்படுவதைப் பற்றிய கேள்வி கேட்கும்போதும் நடந்தது இதுவே.

தகவல் கோருபவர் கூறும் மொழியில் தகவல்களை வழங்க முடிகிறது என்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பொது அதிகாரத்தினதும் பொறுப்பல்லவா? அப்படியானால், மூன்று மொழிகளிலும் தகவல் கோரிக்கைகளை கையாளும் திறனுக்காக போதுமான தகவல் அதிகாரிகள் மற்றும்/அல்லது மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதில் இந்த பொது அதிகாரிகள் என்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்?

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *