News

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டமாகும்.

எவ்வாறாயினும், தகவல் அறியும் படிவத்தில் கோரிக்கையாளர் அணுகலை விரும்பும் மொழி குறிப்பிடும்போது ஒரே விதமான அனுபவம் பல முறை பெறப்பட்டுள்ளது; படிவத்தில் கூறப்பட்ட மொழியை/மொழிகளைக் காட்டிலும் ‘முடிவு நிலுவையில் உள்ளது’ (decision pending) கடிதம் மற்றும் தகவல்களைக் கொண்ட பதில் கடிதம் ஆகிய இரண்டுமே விண்ணப்பப் படிவத்தில் கூறியதைத் தவிர வேறு மொழியில் கோரிக்கையாளரால் பெறப்பட்டுள்ளன.

கோரப்பட்ட மொழி தமிழ் அல்லது ஆங்கிலமாக இருக்கும்போது இது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நடந்ததுள்ளது என்று அறியப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், அரச அமைச்சகம் அல்லது திணைக்களத்திலிருந்து பதில் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்குமாறு கோரும் ஒரு விண்ணப்பதாரருக்கு பதில் சிங்களத்தில் கிடைக்கின்றது. உதாரணமாக, கொழும்பில் பிச்சைக்காரர்கள் தொடர்பான தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு பதிலளித்த போது இந்நிலைமை ஏற்றப்பட்டது; அவர்களின் பதில் சிங்களத்திலேயே பெறப்பட்டது. கொழும்பு மாநகரசபையிலிருந்து தெரு விளக்குகள் செயல்படுவதைப் பற்றிய கேள்வி கேட்கும்போதும் நடந்தது இதுவே.

தகவல் கோருபவர் கூறும் மொழியில் தகவல்களை வழங்க முடிகிறது என்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பொது அதிகாரத்தினதும் பொறுப்பல்லவா? அப்படியானால், மூன்று மொழிகளிலும் தகவல் கோரிக்கைகளை கையாளும் திறனுக்காக போதுமான தகவல் அதிகாரிகள் மற்றும்/அல்லது மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதில் இந்த பொது அதிகாரிகள் என்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்?

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *